14 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 8 |
என்பார் திருவள்ளுவர். இதற்குப் பரிதியார் ஐம்பொறிகளில் ஒன்று குறையினும் குற்றமின்று: முயலாமையே குற்றம் எனவுரைத்தார். முடியரசர் விதியை நம்பி அழிவாரைக் கண்டு வேதனைப்படுபவ ராதலின்,பரிதியார் உரையை மேற்கொண்டு பாட்டிசைக்கின்றார். ‘பொறியின்மை கண்டு நெஞ்சம் புழுங்கிலர் நாளும் நாளும் அறிவறிந் தொழுகல் வேண்டி ஆள்வினை உடைய ராகி நெறியிலே நடந்து வந்தார்’ (2:26) என்று பண்டிதமணியையும் நடக்கவைத்துக் காப்பியத்தை யும் நடத்துகிறார் பாட்டரசர். காப்பிய நடையுடன் திருக்குறளும் பிறபல நன்னூற் கருத்துகளும் விரவிநடக்கும் பாங்கு, இக் காப்பியத்தே ஆங்காங்கு இனங்கண்டு மகிழத்தக்கதாகும். பண்டிதமணியவர்கள் ஏழாம் ஆண்டிற் பள்ளிபுக்குச் சில மாதங்களே பயின்றனர். அப்போது அவர் கற்ற ஆத்திசூடி, உலகநீதி முதலிய சிறுசிறு நீதி நூல்களே அவரைப் பெரிதும் கவர்ந்தமையால், அவற்றை ஓதிஓதி மகிழ்ந்து, பிறகு சிறுகச் சிறுகப் பெருநூல்களை யெல்லாம் தாமே கற்றுத்தேரும் திறமையுடையவரா யினார். ஓதிய ஆத்தி சூடி ஊன்றுகோல் ஆகக் கொண்டே நீதிநூற் படிகள் ஏறி நெடியகாப் பியங்கள் என்னும் வீதிசேர் ஊர்கள் சுற்றி வீறுகொள் சங்கச் சான்றோர் ஓதிய இலக்கி யத்தின் உலகெலாம் உலவி வந்தார்’ (2:39) ஆத்திசூடியில் தொடங்கிய புலமை, அதனையே ஊன்று கோலாகக் கொண்டு, அளவிலா வளர்ச்சி பெற்றமை ஓர் அரிய நிகழ்ச்சியன்றோ? இங்ஙனம் பண்டிதமணிய வர்களின் வாழ்வில் நேர்ந்த அரிய நிகழ்ச்சிகளை மட்டுமே இந்நூல் தொகுத்துரைக்கிறது. சன்மார்க்க சபையைத் தோற்றுவித்து, வளர்த்த பெருமை பண்டிதமணிக்கு உண்டு, அதுபோலவே பண்டிதமணியின் புகழ் |