16 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 8 |
யாற்ற வல்லர்’ (2:18). பண்டிதமணி வடமொழி கற்றாரேனும் ‘தம்மொழி மறந்தாரல்லர்; தமிழராய் வாழ்ந்து நின்றார்’ (2;34) . வருமொழி கற்றுத் தாய்மொழி பழிக்கும் நாய்மனங் கொள்வாரைக் கவிஞர் கடிகின்றார். ‘பெற்றதாய் மொழியிற் பற்றும் பிறமொழி தனில் மதிப்பும் உற்றிடல் வேண்டும் ’ (2:37) என்பதே மணியார் உணர்த்திய உண்மை. நெறியுணர் காதை’யில், சமயநெறியில் பொய்ம்மை பூண்டு நின்றவர்களை இவர் விளக்கிக் காட்டுகின்றார். ‘முற்றுறக் கல்லார் தாமும் முயல்கிறார் பாடல் யாக்க வெற்றரைத் தட்டிக் கேட்க வீறுகொள் புலவரில்லை’ (7:5) எனக் கவிஞர் ‘நெறிபிறழாத பாடல் நெய்திடும் திறமை யில்லாரைக்’ கடிகின்றார். இன்றைய சொற்பொழிவாளர் குறைகளையும் சுட்டுகிறார் கவிஞர். ‘இலக்கியங்கள் பயிலாமல் இலக்கணத்தின் இயல்பொன்றும் அறியாமல் நுனிப்புல் மேய்ந்து சொலக்கருதும் ஒருபொருளைச் சிந்தித் தாய்ந்து சொலுமுறையாற் சொல்லாமல், முழக்கமிட்டுக் கலக்கிவரும் பேச்சாளர்’ (8:1) பெருகிவருவதை வருத்தத்துடன் புகல்கின்ற கவிஞர், ஒரு நல்ல பொழிஞனின் திறன்களையும் நன்கு வகுத்துரைக்கிறார். இலக்கணத்தை வெறுக்கின்ற இக் காலத்தைக் கடிந்து, ‘நிகழ்காலம் இகழ்காலம் ஆயிற்றந்தோ’ (10:9) என இரங்குகின்றார். பாட்டரங்கில் பிறமொழிப் பாடல்களையே இசைப்பவர்க்கு இவர் தக்கவாறு இடித்துரை கூறித் ‘தமிழை மீண்டும் பூக்கவிடா தொழிப்பதுதான் அவர்தம் நோக்கம்’ என அவருள்ளத்தையும் புலப்படுத்துகிறார். தமிழில் பிறமொழிச் சொற்கலந்து எழுதும் சிலரை மிகவும் இடித்துக்கூறிப் பிறமொழி கற்றும் நல்ல தமிழ் நடையிலெழுதும் கதிரேசரின் திறமையை விதந்தோது கிறார். ‘நன்மொழி இதனுள் நாணம் இலராய்ப் பன்மொழிச் சொற்கள் பரவிடக் கலந்து, புன்மைச் செயலாற் பொருந்தாது எழுதும்’ பன்மொழிப் புலமைப் |