பக்கம் எண் :

இளம்பெருவழுதி199

காட்சி 4

  வஞ்சி நாடனும் காழக மன்னனும்
வெஞ்சமர் புரிய விழைவது தெரிந்து
பாண்டிய மன்னன் பகர அவையில்
ஈண்டிய புலவர் இனியநல் லமைச்சர்
அருமறக் கணியர் பொருசமர்க் கடம்பன்
பொருள்நிறை மொழிகள் புகன்றனர் ஆங்கே
  0 . 0 . 0 .
நாகனார்:வாழிய வேந்தே வாழிய தாயகம்
பாண்டியன்:வாழிய தாயகம் எனும்நும் வாய்மொழி
ஏழிசை யாழின் இனித்தது புலவீர்
தாயகம் தாங்குநர் தாமுறு பருவரல்
தோயுநர்க் கன்றித் தோற்றா வாகும்;
நாகனார்:நினக்கொரு படரோ? நினைத்தலும் முறையோ?
மனக்கவல் தவிர்க . . . . . . . .
பாண்டியன்:. . . . . . . . மாசறு மனத்தீர்
வான்முகில் பொய்ப்பின் வளமிகக் குன்றும்
மீன்கொடி வாழ்நர் மெலிவரென் றச்சம்;
நாகனார்:நெறியிற் கோடா முறைநீ புரிதலின்
கருமுகில் என்றுங் கரப்பது காணேம்
நிழல்தருங் குடையோய் நின்நிழல் வாழ்நர்
வளமும் நலமும் வாடுத லறியார்;
உளமிக நோதல் ஒழிமதி பெரும;