பக்கம் எண் :

202கவியரசர் முடியரசன் படைப்புகள் - 8

 
பாண்டியன்:அமைமின் அமைமின் ஆன்றோர் தம்முள்
உமிநுனி யேனும் உறுபகை வேண்டா
நாகனார்:பகையிலை வேந்தே பைந்தமிழ்க் கீங்கோர்
இகல்வரு மாகில் எம்முளஞ் சிவக்கும்;
கணியன்:எமக்குந் தமிழ்க்கும் இடைவெளி காட்டேல்
நுமக்குள கடமை எமக்கும் உளவாம்;
நாகனார்:நன்று மறைவலீர் நயத்தகு கடமை
நின்று நிலவுக நெடிதே வளர்க
கடமை யுணர்வொடு காக்க தமிழைக்
கடவுட் பெயர்சொலிக் கடியேல் அதனை;
பாண்டியன்:அமைதி நிலவுக ஆன்றீர் அனைவரும்
இமையெனத் தமிழ்மொழி ஏத்திக் காக்குவம்;
கலைமலி தமிழைக் காக்குவம் இனிதே;
திசையிற் சென்றது சிந்தையும் பேச்சும்;
செம்புலக்:திருவுளம் யாதெனச் செப்புக பெரும;
பாண்டி:ஒருகுறை யிலாது வெருவுறல் தவிர்த்துக்
குடிபுறந் தோம்பினும் கொற்றவர் பிறர்தம்
கடிபகை வருமெனக் கருதினும் அச்சம்
ஓங்கு மாதலின் உளம்நலி வெய்தும்;
செம்புலக்:வேம்புதலை யாத்த நோன்காழ் எஃகாம்
தாங்கும் மறவர் தம்புகழ் கேட்டு
வெஞ்சமர் ஒன்றும் விழையா மன்னர்
தஞ்செய லன்றித் தலைநிமிர்ந் தறியார்;
பாண்டியன்:வெல்போர்க் கடம்பன் செல்போ ரனைத்தும்
வெல்லும் என்பது வியப்பிலை எனினும்
வஞ்சி நாடன் மலைக்கோல் முரளி
விஞ்சும் பகைகொடு விரகால் தென்புல
எல்லை கவர எண்ணின னாகி
ஒல்லையிற் படைகொட உறுதி பூண்டுளன்;
எனநம் ஒற்றர் இயம்பினர் நெருநல்;