| |
| கடம்பன் | : | கனவினும் அதுதான் கைவரப் பெறாது தொல்லையிற் சிக்குவர் துணிந்தனர் போலும்; |
| பாண்டியன் | : | எள்ளுதல் தவிர்க முள்மரம் முளையிற் கிள்ளுதல் நன்று . . . . . . . . |
| கடம்பன் | : | . . . . . . . . . .வெள்வே லுடையாய் நிலைப்படை ஆங்காங் கெல்லையில் நின்றுள தலைப்படின் அவன்றான் தப்புத லரிது; |
| பாண்டியன் | : | விழிப்புட னிருத்தல் வெல்போர்க் கடம்பன் தொழிற்கது துணைசெயும் . . . . . . . |
| கடம்பன் | : | . . . . . . . . தொழுதுமேற் கொள்ளுவேன் |
| செம்புலச் | : | மற்றுமோர் செய்தி மனத்திற் கொள்ளுக கத்து கடல்குழ் காழகன் சீயன் இற்றை நாள்வரை இறைதரும் இயல்பினன் உரிமை வேண்டி உருத்தெழு வான்போல் திரிந்துளன் எனவும் செப்பக் கேட்டனம்; |
| நாகனார் | : | கார்முகில் சூழிற் கழனிகள் விளையும் போர்முகில் சூழிற் பூவுல கழியும்; |
| கணியன் | : | எடுப்பதுங் கெடுப்பதும் இருமுகிற் குரிய; |
| நாகனார் | : | இடித்துரை கூறுதல் எம்மனோர்க் குரித்து; |
| பாண்டியன் | : | கூறுக யாமுந் தலைமேற் கொள்ளுதும் மாறுகொண் டெழுதல் மற்றவர் தாமே; |
| கடம்பன் | : | போர்மேற் கொள்வோர் புறமிட் டோடத் தார்தாங் கணியினர்நம் தாயகத் துள்ளனர்; |
| பாண்டியன் | : | நன்று நன்று மேவுக நலமே. |