பக்கம் எண் :

204கவியரசர் முடியரசன் படைப்புகள் - 8

காட்சி 5

  வாட்படை தாங்கும் வலந்தரு பாண்டியன்
மீப்படு புலமை விஞ்சிய புலவரொடு
அரண்மனை ஒருசார் அமர்ந்தன னாகி
ஒருமகன் வழுதியின் திருமணங் குறித்துக்
கலந்துரை யாடக் கயல்விழித் தேவியும்
மகிழ்ந்துரை யாடினள் மாலைப் பொழுதே.
  0 0 0 0
  (புலவர் வருகிறார்)
பாண்டியன்:வண்டமிழ்ப் பெரியீர் வருக வருக
அண்டை யிருக்கையில் அமர்ந்தருள் புரிக
நாகனார்:(இருக்கையில் அமர்ந்து)
ஒப்பருந் தேவியோ டொருங்கினி திருந்த
வெப்பகல் மார்பநின் மெய்ப்புகழ் வாழ்க
எப்பொருட் டாக எனையிங் கழைத்தனை?
பாண்டியன்:நாளைய வேந்தன் நம்மகன் வழுதிக்
காளையின் தகவுகள் கலந்துரை யாடஇவ்
வேளை நுமது வருகை வேண்டினம்;
நாகனார்: வைய மாந்தர் மனத்துறு கருத்தைக்
கையாள் உரைசெயுங் காலம் இரியப்
பைய நாவை யசைத்த பழந்தமிழ்
ஐயன் கற்றுள ஆற்றல் பெரிதுமன்;