| | : | வெந்நிட லறியா வெல்போர்க் கடம்பன் பின்னவள் சுரும்பார் குழலியும் இவனும் ஒருவர்க் கொருவர் பொருவறு நிலையினர் இருவருள் முதல்வர் இவனா அவளா எவரெனத் தெளிதல் இயலாத் தகைத்தே; |
| மாதேவி | : | ஆமாம் அவளை அறிகுவென் யானும் அம்மா மகளின் பொறையும் பொற்பும் செறிந்தநல் லறிவும் செவ்விய பண்பும் நிறைந்தவள் அவளென் நெஞ்சங் கவர்ந்தவள்; |
| நாகனார் | : | நின்னெஞ் சொன்றோ? நின்மகள் நெஞ்சும் பொன்மகள் அவள்தான் புகுந்து கவர்ந்தனள் |
| நாகனார் | : | காதல் எனயான் கழறினே னல்லேன்; ஓதுங் கல்வி உயரிய பண்பு பேதை யவள்பாற் பெருகுதல் கண்டு தீதிலான் அன்பைச் சிறியாட் கீந்தனன் எனவே மொழிந்தனென்; ஈதொரு குறையோ? |
| மாதேவி | : | மனங்கொளும் ஒருத்தியை மணங்கொள விழைதல் சினங்கொளற் குரித்தோ? . . . . . . . . |
| பாண்டியன் | : | . . . . . . . . . சினமே எமக்கிலை அன்பா? காதலா? அறிய விழைந்தனம்; இம்மா தேவிக் கிசைவெனில் எமக்கும் மறுப்பிலை விரைவில் மணவினை தொடங்குதும்; விரும்புவ தெனிலோ வேல்விழி மொழிக; |
| மாதேவி | : | மறுப்பும் விருப்பும் மகன்சொல லன்றோ பொருத்தம்; . . . . . . . . . |
| பாண்டியன் | : | . . . . . தேவி, பொங்கு கடல்சூழ் காழக வேந்தன் கடுங்கட் சீயன் ஏழிசைச் செல்வி எழிலியாம் மகளை வழுதிக் கீயும் விழைவினன் என்பது பழுதிலா அமைச்சர் பகரக் கேட்டுளேம்; |