| |
| நாகனார் | : | (குறுக்கிட்டு) எழிலி குழலி எவரே யாகினும் வழுதியின் மனத்தைப் பழுதறத் தெரிந்து செயல்மேற் கொளலே சீர்மைத் தாகும்; |
| பாண்டியன் | : | கயல்விழி குழலியைக் கடிமணங் கொள்ள அயில்வேல் வழுதி ஆவலன் என்பது செந்தமிழ்ப் புலவர் தெளிகுவர் போலும்; |
| நாகனார் | : | தந்தம் மனம்போல் தக்கோர் மணங்கொளல் முந்தை மரபே . . . . . . . . . . . . . . . |
| பாண்டியன் | : | . . . . . . . . . . முரணிலை பெரும; மரபு மீறான் வழுதி யென்பதும் அறிகுவம்; அவன்றான் அரசு நடாத்தும் திறனும் நன்கு தெரிந்துளன் கொல்லோ? |
| நாகனார் | : | அம்புவி காக்கும் அறிவன் இவனெனச் செம்புலச் சிறையார் செப்பக் கேட்டுளேன்; |
| மாதேவி | : | நயத்தகு பலனின் நலங்கெழு விதையிடக் கசக்கும் பாகற் கணியோ நல்கும்? வயப்புலி பூனையைப் பயத்தலும் உண்டோ? |
| பாண்யடின் | : | கொடியனென் றெம்மைக் குறிப்பில் உணர்த்தக் கடும்புலி யென்று கழறினை கொல்லோ? |
| மாதேவி | : | போர்புரி மறவர்க்குப் புலியோ அரியோ நேரெனப் புகல்வர் நேரிழை அறியேன்; |
| பாண்டியன் | : | (மெல்லிய குரலில் அரசியை நோக்கி) நன்று நன்று நரியெனச் சொலாது நின்றனை வேந்தி, நின்மகள் பெருமை கேட்டலும் உளத்துக் கிளர்ந்தெழும் உணர்ச்சி காட்டினை முகத்தில்; கண்மலர் துளிர்த்தன; |
| மாதேவி | : | சிறுவன் பெரும்புகழ் தெரிந்துளேன் எனினும் பிறர்சொலக் கேட்டலிற் பேருவப் பன்றோ? |