பக்கம் எண் :

ஊன்றுகோல்35

தமிழ்வாழ்த்து

ஆழமாப் பயின்றே னல்லேன்
       அகலமும் அற்றே யாகும்
யாழநின் னருளா லம்மே
       யாப்பென ஒன்று கட்டிச்
சூழும்நின் னடிக்கே சூட்டிச்
       சொக்கிநான் வணங்கு கின்றேன்
ஏழையேன் இளகும் நெஞ்சில்
       என்றும்நீ இருத்தல் வேண்டும்

-முடியரசன்