பக்கம் எண் :

98கவியரசர் முடியரசன் படைப்புகள் - 8

       வரும்இப் பண்டித மணியார் பருகக்
       குவளையிற் பசுப்பால் கொடுத்தன ராகக்
       குவளையுட் பாலைக் கூர்ந்து நோக்கிச்
       ‘சிறுபாற் கடலில் சீனி வாசன்
       அறிதுயில் கொள்கிறான்’ என்றனர் அவர்தாம்; 105
       உடனிருந் தோரெலாம் ஒன்றும் அறியா
       திருந்திடப் பாலில் எறும்பு கிடந்ததை
       அருந்தமிh புலவர் விளக்கிச் கூறினர்
       சீனியில் வாசஞ் செய்யும் எறும்பைச்
       சீனி வாசன் என்று செப்பிட 110
       வியந்து நகைத்தனர் வீற்றிருந் தோரே.
       திருவா வடுதுறைத் திருமட மதனில்
       அருள்மிகு தலைவர் அம்பல வாணர்
       இவருடன் பழகிய இனிய கேண்மையர்
       அவரைத் தொழஎழும் ஆர்வம் கூர்ந்தொரு 115
       நாளிற் சென்று நயப்புடன் அணுகித்
       தாளில் வீழத் தலைப்படுங் காலை
       தழுவிய பிரம்பு நழுவிடத் தவறி
       விழும்நிலை எய்தினர் வெருவிய தேசிகர்
       தாவி யெழுந்து தாங்கி அணைத்தனர் 120
       பாவில் உறுநயம் பயின்றிடும் நாவால்
       ‘எளியேம் தவறுவ தியற்கை அதுபோல்
       அளியீர் எம்மை அணைத்துத் தாங்கலும்
       இயல்பே யா’மென இருபொருள் தருமொழி
       இயம்பினர் புலவர் எழுந்தது நகையே. 125
       பாவால் ஒருநூல் பாடி ஒருவர்
       தேவாரம் என்றொரு தெரிபெயர் சூட்டிப்
       பண்டித மணியைக் கண்டொரு பாயிரம்
       பெற்றிடும் ஆவலால் உற்றனர் இவர்பால்
       கற்ற கல்வியில் முற்றுதல் இல்லா 130
       மற்றவர் தமக்கு மதிப்புரை நல்க
       விழைதல் இலரால் விடையிது கூறினர்;
       புதிய தேவாரப் புத்தகந் தன்னைப்