பக்கம் எண் :

232கவியரசர் முடியரசன் படைப்புகள் - 9

பார்த்து வாளாவிருக்குமோ? அவரைச் சிறை செய்யக் காலங்கருதிக் காத்திருந்தது. உடனே, குதித்தார்; கலங்காது நீந்தினார்; உடல் களைத்
தாலும் உள்ளம் சலியாமல் பிரஞ்சுக் கடற்கரையை அடைந்தனர்; அங்கிருந்து அல்லல் பல வற்றுக்கு ஆளாகித் தாய்த் திருநாடாம் இந்தியா வந்துசேர்ந்தார். ஆங்கில அரசினர் இங்கிலாந் திலிருந்து அவர் தப்பிவிட்ட செய்தியை இந்திய அரசாங்கத் துக்குத் தெரிவித்து
விட்டனர். இந்திய அரசாங்க ஒற்றர் அவரைத் தேடத் தொடங்கினர். இந்தியாவில் ஆங்கிலப் பகுதியில் இருப்பது தமக்குத் தீங்கு என்பதை உணர்ந்த வ. வெ.சு. ஐயர் அரவிந்தரும், பாரதியாரும் அடைக்கலம் புகுந்த புதுவைக்கே வந்து சேர்ந்தார் நாட்டு விடுதலைக்கு மூவரும் இணைந்து தொண்டாற்றினர்.

அம் மூவரூம் கூடிச் செயல்புரிவதை ஆங்கில அரசு ஒற்றர்கள் வாயிலாக அறிந்துகொண்டது. காமாலைக் கண்ணனுக்குக் கண்ட தெல்லாம் மஞ்சள்தானே! அம் மூவரும் புதுவையில் இருந்து கொண்டே தங்கள் அரசுக்கு எதிராகச் சதிவேலையில் ஈடுபட் டுள்ளனர் என்று ஆங்கில அரசினர் நம்பினர், அச் சதி வேலையும் ‘இந்தியா’ இதழ் வாயிலாகவே பரப்படுவதாகவும் நம்பினர் ஆகவே, தங்கள் ஆட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அவ்வி தழுக்குத் தடை விதித்தனர். அவ்விதழை விற்போரையும் படிப்போரையும் ஒறுப்பதாக அச்சுறுத்தினர். ஆயினும். மறை முகமாக அவ்விதழ் மக்களால் ஆதரிக்கப்பெற்றது.

‘இந்தியா’ நின்றது

பாரதியார், அரவிந்தர், வ.வெ.சு.ஐயர் ஆகிய அம் மூவர் புகழும் இணைந்து பரவியது. அம்மூவரின் கூட்டு தம் அரசுக்கு வேட்டு என்பதை எண்ணிய ஆங்கிலேயர் புதுவை ஆளுநரை அணுகினர்; ஆளுநரைக் கொண்டு அவர்களை அங்கிருந்து அகற்றிவிட முயன்றனர்; எந்த முறையிலாவது அந்த மூவரையும் புதுவை எல்லையை விட்டு நீக்கி, ஆங்கில ஆட்சி எல்லைக்குக் கடத்திச் சென்று சிறை செய்யக்கருதினர். ஆனால், அதற்கான திட்டங்கள் அனைத்தும் விழலுக்கு இறைத்த நீர் போல் ஆயிற்று. அம் மூவருக்கும் மலைபோல வந்த துன்பம் பனிபோல விலகிற்று.

தோல்வி கண்ட ஆங்கிலேயர் தொடர்ந்து துன்பம் இழைக்கத் துணிந்தனர். ஆங்கிலக் காவல் துறையினர், பிரஞ்சு அஞ்சல்துறை அலுவலகங்களை அணுகினர். புதுவை அஞ்சல் நிலைய அலுவலர் களைத் தம்வயப் படுத்திக்கொண்டு வெளியூர் செல்ல அஞ்சலகத்