பக்கம் எண் :

பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம்127

நான்:மாநாட்டுக்கே நான் போகவில்லை; நடத்தியவர்
யாரென்பதும் எனக்குத் தெரியாது.

அவர்:விடுமுறை நாள் தானே, போயிருக்கலாமே?

நான்:ஆம், கட்டாயம் போயிருப்பேன், என் குழந்தைக்கு
அம்மை வார்த்திருந்தது; பாடநூல் ஒன்று எழுதிக்
கொண்டிருந்தேன்; வெளியீட்டாளரும் கும்ப
கோணத்திலிருந்து வந்திருந்தார். அதனால் போக
இயலவில்லை அது மட்டுமன்று. எங்கள் வீட்டுக்குப்
பக்கத்திலேயே நடந்த, கலைஞர் எழுதி நடித்த
‘காகிதப்பூ’ நாடகத்திற்கும் செல்லவில்லை.

அவர்:வகுப்பறையில் அரசியல் பற்றிப் பேசுவதுண்டா?

நான்:உள்ளபாடங்களை நடத்தவே 40 மணித் துளிகள்
போதவில்லை. அரசியல் பேச நேரம் ஏது? சாதி,
மொழி பற்றிப் பாடங்களில் வந்திருந்தால் இரண்டும்
பற்றிப் பல மேற்கோள் காட்டுவேன்.

அவர்:உங்கள் கவிதைகளை எழுதுமாறு, வகுப்பறையில்
மாணவர்களிடம் கூறுவீர்களா?

நான்:கவிதை யார்வமுள்ள பிள்ளைகளிடம் எழுதச்
சொல்லுவேன், அதுவும் வீட்டில் எழுதி வருமாறு
கொடுப்பேன்.

அவர்:அஞ்சலில் சேர்க்குமாறு மாணவர்களிடம் சொல்வீர்
களா?

நான்:பள்ளி முடிந்து வீட்டிற்குச் செல்லும் பொழுது வழி
யிலுள்ள அஞ்சற் பெட்டியிற் போடச் சொல்லுவேன்.

அவர்:பாடங்களைச் சரியாக நடத்துவதில்லையாமே?

நான்:நான் நடத்தவில்லையென்றால் பிள்ளைகள் மிகுந்த
மதிப்பெண்கள் எப்படிப் பெற முடியும்?

அவர்:சில அரசியல் கட்சிகளைப் பற்றி இழிவாக
வகுப்பறையில் பேசுவதுண்டா?