பக்கம் எண் :

பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம்209

காளையும் கன்னியும் முதலிரவில் கூடுகின்றனர். அதனை ஆசிரியர்.'

'நூலறியார் கலிநுகரப் புகுதல் போல
நுழையினும்பின் சொலற்கரிய இன்பங் கண்டார்'

- என்ற நயமான நுட்பமான உவமையால் உணர்த்து
கின்றார்.

இந்நூல் மிக விரைவான, தெளிவான நடையோடு உணர்ச்சிச் சுழியிட்டு ஓடுகின்றது. கவியுலக வரலாற்றுப் பொன்னேட்டில் தனது வெற்றிச் சுவட்டினைத் தெளிவாகப் பதித்துள்ளவர்தான் முடியரசன். என்றாலும் இந்நூல் அச்சுவட்டினை இன்னும் அழுத்தமாகப் பதித்துள்ளது'

- புலவர் பொன்னரசன்.