பக்கம் எண் :

பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம்211

இப்பாடலில் 'உயிரென நட்டார்' என நண்பர்க்கு மட்டும் அடைமொழி தந்து, பிறர்க்கு அடைமொழி தராது பாடியதி லிருந்தே நட்புக்கு நான் கொடுத்திருந்த மதிப்புப் புலனாகும்.

நட்புக்கு என்னுளத்தில் எத்தகைய இடமிருந்தது என்பதற்குப் பிறிதொரு சான்றும் கூறுதல் ஏற்புடைத்தாகும்.

எனக்குத் திருமணமாயிற்று. முதலிரவு நிகழ்தல் வேண்டும். அவ்விரவில் வீட்டில் என்னைக் காணாது தேடுகின்றனர். அவ்வ மயம் என் அன்னையார் 'பள்ளிக்கு முன்னே நிற்கும் மரத்தடியின் கீழுள்ள பலகைக் கல்லில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருப் பான். சென்று பாருங்கள்' என்று கூற அவர்களும் அவ்வாறே அங்கே வந்து என்னை இழுத்துச் சென்றனர்.

காதலைவிட - காதல் மனையாளை விட நண்பர்களையே மிகுதியும் விழைபவன் நான். இன்றும் அப்படியே. கவலையால் மனச் சோர்வுற்றிருக்குங்கால் நண்பர்களுடன் உரையாடி மகிழ்ந்து மனத்தை ஆற்றிக் கொள்ளுவேன். என் கவலைப் பிணிக்கு ஓர் அருமருந்தாகும் நட்பு.

இப்பொழுது பணியிலிருந்து ஓய்வு பெற்றபின்னர், தனிமைத் துயர் என்னை வாட்டிவதைக்கும். கவலைகளும் என்னைத் தின்னும். கவலைக் கடலுள் ஆழ்ந்து விடுவேன். அப்பொழு தெல்லாம்

'துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ
இன்பம் சேர்க்க மாட்டாயா?'

என்ற பாவேந்தர் பாடலை எனக்குள் பாடிக் கொள்வேன்.

"அன்றை நற்றமிழ்க் கூத்தின் முறையினால்
ஆடிக் காட்டமாட்டாயா?"

என்ற வரிகளைப் பாடும்பொழுது கடலுள்ளிருந்து சற்றே மேலெழுவேன்.

'இறைவனாரின் திருக்குறளிலே ஒரு சொல்
இயம்பிக் காட்ட மாட்டாயா?'

என்ற வரி வரும்பொழுது மேல்மட்டத்துக்கு வந்துவிடுவேன்.

குறளிலே ஒரு சொல் என்றவுடன் இடுக்கண் வருங்கால் நகுக என்ற குறள் நினைவிற்றோன்றும். அவ்வேளையில் நண்பர்கள் என்