98 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 11 |
2 அன்பாய் இரு அன்புள்ள பாண்டியனுக்கு, நலம். உன் கடிதம் கிடைத்தது. அங்கிருக்கும் சூழ்நிலை களைப் பற்றியெழுதியிருந்தாய். அவை ஏற்ற முறையில் அமைந் திருப்பது மகிழ்ச்சிக்குரியது. நன்கு அமையாவிடினும் நம் முயற்சி யால் மாற்றி அமைத்துக் கொள்ளவேண்டும். அன்பால் எதையும் செய்ய முடியும். தம்பி, உனக்கு அடிக்கடி இத்தகைய கடிதங்கள் எழுதி, உன் மனத்தைப் பண்படுத்த எண்ணுகின்றேனே, அதற்குக் காரணம் என்ன? உன்பாற் கொண்ட அன்புதான். நீ வீட்டிலிருக்கும்பொழுது, சில வேளைகளில் உன்னைக் கடிந்துரைத்திருக்கின்றேன் அல்லவா? அதற்கும் அன்புதான் காரணம். நீ செய்த தவறுகளைச் சில சமயங்களில் உன் தாய், என்னிடங் கூறாமல் மறைத்து வைத்தாரே, அதற்குங் காரணம் அன்புதான். நம் இல்லத்திற்கு விருந்தினர் வரும்பொழுது, நம் இல்லாமையைக் காட்டிக் கொள்ளாமல், வந்தவர் மகிழும் வண்ணம் விருந்தோம்பும் பண்பிலே உன் அன்னை எவ்வளவு தலைசிறந்து விளங்குகின்றார்! அஃதும் அன்பில் விளைந்த பண்புதான் தம்பி. இவ்வாறு ஒவ்வொரு வீட்டிலும் குடும்பத்திலும் அன்பு இழையோடியிருப்பதைக் காணலாம். அன்பென்பது தாய், தந்தை, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, உற்றார், நட்டார் என்ற தொடர்புடையவரிடத்தே தோன்றும் மன நெகிழ்ச்சியோகும். அருள் என்பது, தொடர் புடையாரிடத்தும், தொடர்பில்லாரிடத்தும், உயர்திணை, அஃறிணை யாகிய எல்லாவுயிர்களிடத்திலும் காட்டப்படும் அன்பாகும். இத்தகைய அருளென்னும் பேராற்றலுக்கு அடிவே ராக இருப்பதும் அன்புதான். அருளென்னுங் குழந்தையை ஈன்றெடுத்த தாய் |