பக்கம் எண் :

எக்கோவின் காதல்177

கிருஷ்ணனும் தொழிலாளர் நலனுக்குப் பாடுபடு பவன்தான். ஆனால் பழமையில் மோகங் கொண்டவன். பதவியில் ஆசை யுண்டு. அந்தப் பதவிப் பித்து இருப்பதால் பொறாமை எண்ணமும் வளர்ந்து வந்தது. முரட்டுத்தனமும் இயற்கையிலேயே உடையவன்.

அவர்களின் கழகத் தேர்தல் வந்தது. தேர்தலுக்குக் கிருஷ்ணன் நின்றான். மற்றவர்கள் வற்புறுத்தலால் அர்ச்சுனனும் நிறுத்தப் பட்டான்.

கிருஷ்ணன் கொள்கை வேறு. அர்ச்சுனன் கொள்கை வேறு. இந்தக் காரணங்களால் ஏற்பட்ட பொறாமையால் தான் கிருஷ்ணன் பழனியிடம் அர்ச்சுனனைப் பற்றிக் குறை கூறிக் கொண்டிருந்தான்.

பழனி விடைபெற்று வீட்டுக்கு வரும் வழியில் அர்ச்சுனனைக் கண்டான்.

"என்ன அர்ச்சுனா! நாளை நடக்கப் போகும் தேர்தலில் வெற்றி உனக்கா அவனுக்கா!"

"நான் மாட்டேன் என்றேன். கேட்கவில்லை. அதுவும் கிருஷ்ணன் நிற்கும் பொழுது நான் நின்றால் அவர் வருத்தப்படு வார் என்று சொன்னேன். ஒருவரும் என் சொல்லைக் கேட்க வில்லை; வெற்றியாருக்குக் கிடைத்தா லென்ன? நமக்கு வேண்டியது தொழிலாளரின் வெற்றி தானே! அந்த வெற்றிக்கு நாம் ஒன்று சேர்ந்து உழைக்க வேண்டும். அதைத் தான் நான் விரும்புகிறேன்."

"வணக்கம். நேரமாகிறது. நான் வருகிறேன்".

*****

ஒருநாள் மாலை, கழகத்தில் கூட்டம் நடைபெற்றது.

"நாம் ஒற்றுமையாக இருந்தால்தான் நமது நலனை. உரிமையைப் போராடிப் பெற முடியும். முதலாளித்துவம் நமக்குப் பல வகையில் தீங்கு செய்து கொண்டு வருகிறது. அத்தீங்குகளிலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ளவே நமது கழகம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அதையறிந்து நாம் வேலை செய்ய வேண்டும். நமது நோக்கத்தை விட்டுக் கழகத்தை வேறு வழிகளில் செலுத்தாமல் இருக்க வேண்டும். அகிம்சை வழியிலே சென்று தொழிலாளர் வெற்றி பெற வேண்டும் என்று ஆண்டவனை வேண்டிக்கொண்டு என் சிற்றுரையை முடித்துக் கொள்ளுகிறேன்." என்று பேசிவிட்டு உட்கார்ந்தான் கிருஷ்ணன்.