17 எங்களை ஆளாக்கிய ஐயா எஸ். சாந்தா சோமசுந்தரம் B.Sc., (மகன் வழிப் பேர்த்தியாகிய சாந்தா, தம் ஐயாவின் குழந்தை வளர்ப்பு முறைகளை நினைவு கூர்கிறார்.) எங்கள் ஐயா என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது அறிவுரை களும் அடுத்துப் பழமொழிகளும் தான். எங்கள் சிறுவயதில், அன்று சொன்னவை மனத்தில் பசுமரத்தாணி போல் பதிந்து, இன்று அன்றாட வாழ்க்கைக்கு உதவுகின்றன. அன்பு காட்டுகையில் அன்பாகக் கூறி, கண்டிக்கையில் கோபமாகக் கூறித் திருத்துவதற்கு அன்று நமக்கு இருந்த ஐயா, இன்று நம் பிள்ளைகட்கு இல்லையே என்று தோன்று கின்றது. அன்று சொன்னவை அர்த்தமுள்ளவை. கேட்பதற்கு அப்பொழுது நேரம், பொறுமை எல்லாம் இருந்தன. ஆனால் இப்போதோ எல்லாமே இயந்திர வாழ்க்கையாகி விட்ட நிலையில், தானாகத் தெரிந்து அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. பிள்ளைகள் எல்லோரும் சேர்ந்து விளையாடும் பொழுது சிறு சச்சரவு வந்தால், உடனே ஒரு பாரதியார் பாட்டு ‘ஓடி விளையாடு பாப்பா, ஒரு குழந்தையை வையாதே பாப்பா’... என்பார்கள். மாலை நேரத்தில், விளக்குப் போடத் துணை தேடுகையில், ‘அச்சமில்லை, அச்சமில்லை அச்சமென்ப தில்லையே’ என்ற பாரதியார் பாட்டைப் பாடிக் கொண்டே போ எனக் கூறுவார்கள். விளையாடுகையில் சிறு பிள்ளை யானால், சிறு பிள்ளைக்கு விட்டுக் கொடு என்றும், பெரிய பிள்ளைகட்குத் திருப்பி பதில் சொன்னால் அவர்கள் சொல்வதனால், உடம்பில் காய்த்துத் தொங்குகிறதா என்றும் கேட்பார்கள். சக வயதுப் பிள்ளையானால், “பொறுத்தார் பூமி ஆள்வார் பொங்கினார் காடாள்வார்” என்று கூறுவார்கள். ஒரு முறை பாரதிதாசன் ஐயா அவர்கள் வீட்டுக்கு வந்த போது, வழக்கம் போல் “வாருங்கள்” என்று கூறி விட்டேன். உடனே, ஐயா |