பக்கம் எண் :

சீர்திருத்தச் செம்மல்19

எரியும் நெருப்புக்கும் எறியும் கல்லுக்கும் அரிவாள் வெட்டுக்கும் சுழற்றுங் கம்புக்கும் அஞ்சாது, சுழன்று சுழன்று கருத்துப் போர் புரிந்து வந்த சுயமரியாதை வீரர்களுக்குப் பாசறையாக, ஊர்தோறும் ஓரிருவர் தம் இல்லங்களைத் தந்து உதவிய பெருமக்களும் இருக்கத் தான் செய்தனர்.

இவ்வாறு தென் மாவட்டங்களில் சுற்றுப் பயணம் மேற் கொண்டு, போராடி வரும் வீரர்களுக்கு, களைப்பாறும் இடங்களாகக் கானாடுகாத்தானில் வயி.ச.சண்முகனாரின் 'இன்ப மாளிகை'யும் காரைக்குடியில் அண்ணன் இராம. சுப்பையா அவர்களின் 'சமதர்ம' இல்லமும் விளங்கி வந்தன.

சுருங்கக் கூறின், தென் மாவட்டங்களைப் பொறுத்த வரை, செட்டி நாட்டிலுள்ள 'இன்ப மாளிகை'யும் 'சமதர்ம' இல்லமும் சுயமரியாதைத் தோழர்களுக்குத் தெற்குக் 'கேந்திர'ங்களாக விளங்கின என்று கூறலாம். எல்லாத் தலைவர்களும் தொண்டர் களும் வந்து தங்கிய பெருமை இவ்விரண்டு மனைகளுக்கும் உண்டு.

இன்ப மாளிகையின் வாயிலில் எப்பொழுதும் இரண்டு மகிழுந்துகள் (கார்கள்) நின்று கொண்டிருக்கும். அவற்றுள் ஒன்றைத் (ஸ்டுடி பேக்கர்) தந்தை பெரியாருக்கு அன்பளிப் பாக வழங்கி விட்டார்.

சண்முகனார் வழங்கிய அம் மகிழுந்துதான், இந்தி எதிர்ப்பின் போது, தந்தை பெரியாரிடமிருந்து அரசாங்கத் தால் பறிமுதல் செய்யப்பட்டது.

குருகுலப் போராட்டம்

வ.வே.சு.ஐயர் என்று எல்லாராலும் அழைக்கப் பெற்ற சிறந்த தேசிய வாதியாகிய வ.வே. சுப்பிரமணிய ஐயர் சேரன்மாதேவி என்னும் ஊரில் 'குருகுலம்' என்ற பெயரில் ஒரு தேசிய நிறுவனத் தைத் தொடங்க முயன்றார்.

அந்நிறுவனத்துக்காக நம் வயி.சு.சண்முகனார் வழங்கிய ஆறாயிரம் உரூவாவுக்குச் சேரன்மாதேவியில் ஐயர் நிலம் வாங்கினார்.

மேலும் அதன் வளர்ச்சிக்குப் பொருள் சேர்க்க மலேயாவுக்குப் புறப்பட்டார். குமரன், ஊழியன் என்னும் இதழ்களின் விளம்பரத் தால் பெருந்தொகை சேர்ந்தது. அதனைக் கொணர்ந்து, குருகுலம் தொடங்கி, நடத்தி வந்தார்.