பெரியாருக்கு வேகம் வந்துவிட்டது. குருகுலத்தை ஒழித்துக் கட்ட வேண்டியதுதான் என்ற முடிவுக்கு வந்தார். அப்போது அமைச்சராக இருந்த எஸ். இராமநாதன் அவர்கள் இல்லத்தில் முதன்முதலில் ஒரு கூட்டம் கூட்டினார். பெரியார், டாக்டர் வரதராசுலுநாயுடு, எஸ். இராமநாதன், திரு.வி.க. என். தண்டபாணிப் பிள்ளை முதலியோர் கூடி, டாக்டர், வரதராசுலு அவர்களைத் தலைவராகக் கொண்டு, குருகுலத்தை எதிர்த்துப் போராட்டம் தொடங்கினர். தமிழகமெங்கும் சுற்றுப்பயணஞ் செய்து குருகுலத்துக் கொடுமை களையெல்லாம் எடுத்துச் சொல்லி வந்தனர். இப்போராட்டத்தில் செட்டி நாட்டின் சார்பாக வயி.சு. சண்முகனார், அறிஞர் சொ. முருகப்பனார், தமிழ்க்கடல் இராய. சொக்கலிங்கனார் போன்ற பெரு மக்கள் தீவிரமாக ஈடுபட்டனர். குருகுலத்தைத் தாமே ஏற்று நடத்தவும் அணியமாக (தயாராக) இருந்தார் வயி.சு. சண்முகனார் என்பதை அறியும் போது, போராட் டத்தில் கொண்டிருந்த ஈடுபாடும் அதன் பொருட்டு ஏற்கவிருந்த ஈகமும் (தியாகம்) நன்கு விளங்கு கின்றன. இறுதியில் தேசியப் போர்வையில் வளர்ப்பதற்கென்றே தோன்றிய வ.வே.சு. ஐயரின் குருகுலம் ஒழிந்தது. சண்முகனாரைப் பற்றிக் கவிஞர் மன்னர் மன்னன், தாம் எழுதிய 'கறுப்புக் குயிலின் நெருப்புக் குரல்' என்னும் நூலில் குறிப்பிட்டிருப் பதைக் கீழே தருகிறோம். "செட்டிநாட்டைச் சேர்ந்த சுயமரியாதை இயக்கப் பெரியார் வை.சு. சண்முகனாரின் மடல் வந்தது. இவர் பாரதியைப் புரந்த வள்ளல்; சேரன் மாதேவி குருகுலத்தை ஏற்று நடத்திய தீரம் படைத்தவர். கானாடுகாத்தானில் 'இன்ப மாளிகை' எனும் மாபெரும் வளமனையே செட்டிநாட்டுச் சீர்திருத்த இயக்கப் பாசறையாக விளங்கியது. பெருமை கொண்டது. சுயமரியாதை இயக்கத்தின் ஆழமான கருத்துகளை வலியுறுத்த 'ஞானசூரியன்' எனும் நூலினை வெளியிட்ட பெருமை இவரைச் சேர்ந்தது. இது மனுதர்மத்தின் தமிழாக்கமாகும்." இனி, உலகம் சுற்றிய தமிழர் 'சோமலெ' அவர்கள் தமது 'செட்டிநாடும் தமிழும்' என்ற நூலில் சண்முகனாரைப் பற்றிக் குறிப்பிடுவதைக் காண்போம்; |