பக்கம் எண் :

30கவியரசர் முடியரசன் படைப்புகள் - 13

பிடித்து விட்டது. அவருடைய இசைவைக் கேட்டுக் கொண்டு பெண் பார்க்கும் அடுத்த கட்டத்துககு ஏற்பாடு செய்தேன்.

புதுவையில் பெண் பார்க்க நாளும் குறிக்கப்பட்டது. என் சுமையை (நகைகள்) சரசுவதியின் உடம்பில் ஏற்றி அவளை அலங்கரித்தேன். கண்ணப்பர் வந்தார். பெண்ணுக்கும் பிடித்தது. பெண்ணும் கண்ணப்பர் கண்ணுக்குப் பிடித்தது. திருமணம் உறுதி செய்யப்
பட்டது."

இவ்வாறு முருகு சுந்தரம் எழுதிய 'குயில் கூவிக் கொண்டிருக்கும்' என்னும் நூலில் மஞ்சுளாபாய் அம்மையார் குறிப்பிடுகிறார்.

இனி மணமகள் சரசுவதி என்ன கூறுகிறார் என்று அவர் வாயி லாகவே கேட்போம்.

'21-1-44இல் எனக்கும் புலவர் கண்ணப்பனாருக்கும் திருச்சிராப் பள்ளியில் பதிவுத் திருமணம் நடைபெற்றது... என் திருமணம் நடைபெறப் பெரிதும் முயற்சியெடுத்துக் கொண்டு உறுதுணையாக இருந்தவர்கள், கானாடுகாத்தான் தனவணிகர் திரு. வை.சு. சண்முகம் செட்டியாரும், அவரது துணைவியாரான மஞ்சுளாபாய் அம்மை யாரும் ஆவர். அம்மையார் எங்கள் குடும்பத்தின் பால் மிக்க ஈடுபாடு கொண்டவர். அவரை அத்தை என்று அன்போடு அழைப்பது வழக்கம்.

திருமதி மஞ்சுளா பாய் அம்மையார் அவர்களே மாப்பிள்ளை பார்த்து விட்டுத் திடீரென்று ஒருநாள் புதுச்சேரி வந்தார். அவரே ஒட்டடை அடித்து வீட்டைத் தூய்மை செய்தார். பால் வாங்கிக் கொண்டு வந்தார். பெண் பார்க்கும் படலத்தை உடனிருந்து நடத்தினார்.'

திருச்சியில் திருமணம் பதிவு செய்யப்படும் பொழுது பதிவாள ருக்கும் பாவேந்தருக்கும் சொற்போர் நடக்க விருந்த வேளையில் நம் சண்முகனார் தலையிட்டு, அதை நிறுத்தித் திருமணம் பதிவா வதற்கு உறுதுணையாக இருந்தார் என்பதைப் பாவேந்தர் மகன் மன்னர்மன்னன் தாம் எழுதிய 'கருப்புக் குயிலின் நெருப்புக் குரலில்' எழுதியிருப்பதைக் காண்போம்.

"21-1-1944 இல் திருச்சி துணைப்பதிவாளரும் திருமணங் களுக்கான பதிவாளருமான கே. சுப்பிரமணிய ராவ் முன்னி லையில், மணமக்களும் பெற்றோரும் உற்றாரும் நண்பர் களும்