பக்கம் எண் :

சீர்திருத்தச் செம்மல்31

போய் நின்றோம். மணமகளின் தந்தையாரை, (பாவேந் தரை) பெயர், முகவரியெல்லாம் கேட்டுக் கொண்டே வந்த பதிவாளர், 'மதம்?' என்று வினவினார். மணமகளின் தந்தை 'அதெல்லாம் எதுக்கு?' என்று மறுவினாத் தொடுத்தார்.

திருமணப் பதிவு நடைபெறாமல் விவாதம் நீளும் போலி ருந்தது. திரு. டி.பி. வேதாசலமும், வயி. சு. சண்முகனாரும் பதிவாளரைச் சந்தித்து நிலைமையைச் சரிக்கட்டித் திருமணம் பதிவானது. வயி. சு. சண்முகனார், சண்முகவேலாயுதம், கி.ஆ.பெ. விசுவநாதர் ஆகியோர் சான்றாளர் கையொப்ப மிட்டனர்."

இனி, இத்திருமணம் பற்றி, மணமகள் தந்தை பாவேந்தர் பாரதிதாசனிடம் கேட்டுப் பார்ப்போம். அவர், நாமக்கல் மு. செல்லப்ப ரெட்டியாருக்குக் கீழ்க்கண்டவாறு எழுதுகிறார்.

புதுச்சேரி
8-1-44

அன்புள்ள திரு. ரெட்டியார் அவர்களுக்கு,

வணக்கம்,

நானும் வை.சு.வும் கோனாபட்டார்களும் திருமண விஷயமாகப் பேசி முடிவு செய்த திட்டப்படி, இன்று வை.சு.வுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளேன். அந்தக் கடிதத்தின் நகலை இதில் வைத்திருக்கிறேன். இதை மனத்தில் வைத்துக் கொண்டு தயவு செய்து தாங்கள் கரூருக்கு நேரில் மாப்பிள்ளை இருக்கும் இடந்தேடிச் சென்று, நான் தங்களை அனுப்பிய தாகச் சொல்லிப் பேசவும், அதில் சொல்லியுள்ள திட்டங்களை அவர்களிடம் (கண்ணப்பரிடம்) கூறிப் பதில் தெரிந்து எழுதவும். ஏன் தங்களை அனுப்புகிறேன் என்றால் வை.சு. மூலமாகத் தான் மணமகனுடைய கருத்து எனக்குத் தெரிவிக்கப்பட்டது. நேரில் என்னிடம் திருமணப் பேச்சு நடக்கவில்லை. ஆதலால் ஒருவருக்கிருவராகக் கலந்து பேச வேண்டுமென்று நான் கருதுகின்றேன்.

பாரதிதாசன்.

இம்மடல் வாயிலாக, சரசுவதியின் திருமணத்தில் பாரதி தாசனுக்கு எவ்வளவு தொடர்பிருந்தது; வயி.சு. சண்முகனாருக்கு எவ்வளவு தொடர்பிருந்தது? என்பதை நாம் தெரிந்து கொள்கி றோம். (இம்மடல் முருகு சுந்தரம் தொகுத்த 'அரும்புகள், மொட்டுகள், மலர்கள்,' என்னும் நூலில் உள்ளது.)