பக்கம் எண் :

சீர்திருத்தச் செம்மல்93

சண்முகனாரின் நட்பில் திளைத்தார். பழந்தமிழ் இலக்கிய நூல் களைக் கட்சிக்காக ஜீவா அவர் களிடம் வை.சு. வழங்கினார்.

செக்கிழுத்த செம்மல் சிதம்பரனாரின் வரலாற்றை எழுதிய தேச பக்தரும் 'லோகோபகாரி' பத்திரிகையின் ஆசிரியருமான பரலி. சு. நெல்லையப்பர், வை.சு.வின் நெருங்கிய நண்பர்.

தமிழ்ப்பணி

'பைந்தமிழ்த் தேர்ப்பாகன்' பாரதியின் பாடல் உரிமைகளை வாங்கியிருந்த தொழிலதிபர் ஏவி. மெய்யப்பனாரிடம், 'பாரதியின் பாடல்களைப் பொதுச் சொத்தாக்க வேண்டு மென்று கேட்டுக் கொண்டதை மதித்துப் பாரதியார் பாடல் களை நாட்டின் பொதுச் சொத்தாக்கிப் புகழ் பெற்றார் மெய்யப்பனார்.'

"தமிழகத்துக்கு நற்கால உதயம்! தமிழ் நாட்டில் தமிழிசையை எதிர்ப்போரும் உண்டா?" என்ற தலைப்பில் அக்காலத்தில் தமிழிசைக் காகத் துண்டுப் பிரசுரங்கள் வெளியிட்டார்கள்.

"தமிழ்நாடு வானொலி கேட்போர் கழகம்" (Tamil Nadu Radio Listeners Association) என்ற அமைப்பினை உருவாக்கித் திருச்சி, சென்னை வானொலி நிலையங்களில் தமிழ்ப் பாடல்கள் ஒலிக்க வேண்டும் என்று கடிதங்களை எழுதியனுப்பிய வண்ணம் கிளர்ச்சி செய்தார்கள்.

பொதுப் பணிகள்

வை.சு.ச. அவர்கள் இராமநாதபுர மாவட்டக் காங்கிரசின் தலவராகவும், அனைத்திந்தியக் காங்கிரசுக் கமிட்டியின் உறுப்பின ராகவும், சுயமரியாதை இயக்கத்தின் பொருளாள ராகவும் இருந்து பொதுப் பணியாற்றினார்கள்.

ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்க அயல் நாட்டுத் துணிகளை ஒழிக்கும் திட்டத்தின் கீழ், தம் இல்லத்தி லிருந்த ஏராளமான துணிகளை எடுத்து வந்து, காரைக்குடி மகார் நோன்புத்திடலில் (காந்தி சதுக்கம்) எரித்து அரசியல் விழிப்பினை அன்று ஏற்படுத்தினார்கள்.

வை.சு.ச. தம் வீட்டு இன்ப துன்ப நிகழ்ச்சிகளில் ‘சமபந்தி போஜனம்’ ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே நடத்தி வந்தார்கள். அக்காலத்தில் இது புரட்சியாக விளங்கியது.