3. பாண்டியர்* பாண்டிய நாடு தமிழகத்தின் தென்கோடியில் கிழக்கே வங்காளக் குடாக் கடலையும், தெற்கே குமரிக் கடலையும், மேற்கே அரபிக் கடலையும் எல்லைகளாகக் கொண்டிருந்தது. யவனர் இம் மூன்று கடல்களையும் செங்கடல் என்னும் பொருட்பட எரித்திரையக்கடல்1 என்று அழைத்தனர். பாண்டிய நாட்டுக்கும் இலங்கைக்கும் இடையில் கடல் உள்ளது. இராமேசுவரத்திற்கு வடபால் உள்ள கடற்பகுதி ‘பாக்’ கடலிணைப்பு என்றும், தெற்கிலுள்ள சிறு பகுதி ‘மன்னார் வளைகுடா’ என்றும் வழங்கப்படுகின்றன. இக் கடற்பகுதிகளைப் பெரிபுளூஸ் நூல் ‘ஆர்கலஸ்’2 என்றும், தாலமி ‘ஆர்கலிக் கடல்’ என்றும் குறிப்பிடு கின்றனர். இதனால் ‘ஆர்கலி கடல்’ என்னும் பெயர்3 இப் பகுதிக்கு வழங்கியதாகக் கொள்ளலாம்.4 இப்போது இராமேசுவரம் இருக்கும் பாம்பன் தீவு முற்காலத்தில் பாண்டிய நாட்டோடு இணைந்திருந்தது. நானூறு ஆண்டுகளுக்கு முன் போர்ச்சுகீசியர் வந்து வாணிகம் செய்த காலத்தில் பெரும்புயல் ஒன்று அடித்து இந் நிலப்பகுதி கரைந்து தீவாக உருக் கொண்டது. ஆகையால், சங்க காலத்தில் இந்தத் தீவு பாண்டிய நாட்டோடு இணைந் திருந்தது. பல்லாயிரம் ஆண்டுகளுக்குமுன் இப்போதுள்ள இலங்கைத் தீவும் பாண்டிய நாடும் இணைந்து ஒரே நிலப்பரப்பாக இருந்தது. கன்னியாகுமரிக்குத் தெற்கிலும், கிழக்கிலும் அக்காலத்தில் நிலங்கள் இருந்தன. பின்னர் அவ்வப் போது தோன்றிய புயல்களினாலும், கடல் கொந்தளிப்பினாலும் கரைந்தும் சிதைந்தும் அந்நிலப் பகுதிகள்
* தமிழ்நாட்டு வரலாறு: சங்ககாலம் - அரசியல் (1983) எனும் நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரை. 1. எரித்திரையக் கடலின் ஆதிப்பெயர் ‘Erythraean ‘e’ என்பதாகும். எரிதிரியன் கள் (‘Eruscans’ என்போர்) என்ற செந்நிறமுடைய மக்கள் அக் கடல்களில் வாணிகம் செய்துவந்தனர். 2. Argalus 3. Orgalic S a 4 முதுமொழிக்காஞ்சி ஆர்கலி உலகத்து மக்கட்கெல்லாம் என்று கூறுமிடத்து அச் சொல் கடலின் பொதுப் பெயராக அமைந்திருந்ததைக் காணலாம். |