408 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 1 |
வார்த்திகனைச் சிறையிட்டது சோழநாட்டில் பராசரன் என்னும் பார்ப்பனன் ஒருவன் இருந்தான். அவன் சேரஅரசன் ஒருவன் மறையவன் ஒருவனுக்கு வீடுபேறு கொடுத்த செய்தியைக் கேள்விப்பட்டு (பல்யானைச் செல்கெழு குட்டுவன்) அவனைத் தானும் நேரில் கண்டு பரிசில் பெற்றுத் திரும்பினான்; வழியில் தங்கால் என்னும் இடத்தில் ஓர் ஆலமரத்தடியில் தங்கி இளைப் பாறினான். அப்போது பார்ப்பனச் சிறுவர்கள் அவனைச் சூழ்ந்து கொண்டனர். பராசரன் தன்னோடு வழுவின்றி வேதம் ஓதுபவர்க்கு ஒரு பரிசு நல்குவதாகக் கூறினான். அவ்வூரில் வாழ்ந்த வார்த்திகன் என்னும் அந்தணனின் மகன் வழுவின்றி வேதம் ஓதக் கேட்டுத் தன்னுடைய முத்துப் பூணூலை அச் சிறுவனுக்கு அளித்தான். ஏழை வார்த்திகன் மகனின் மார்பில் விலையுயர்ந்த முத்துப் பூணூலைக் கண்ட அரசு காவலர் அரண்மனையில்திருடிய குற்றம் சாட்டி வார்த்திகனைச் சிறையிலிட்டனர். வார்த்திகனின் மனைவி கார்த்திகை தன் மகனுக்கு இழைக்கப் பெற்ற கொடுமையை ஐயை கோயிலில் முறையிட்டு அழுதாள். ஐயைத் தெய்வம் தன் கோயிற் கதவுகளை அடைத்துக் கொண்டது. தன்னாட்சி யில் கொடுங்கோன்மை நிகழ்ந்துள்தோ என வினவிப் பாண்டியன் ஆராய்ந்தபோது, காவலர் வார்த்திகனுக்கு உண்டாக்கிய துனபத்தைக் கூறினர். மன்னன் வார்த்திகனை வருவித்து அவனிடம் மன்னிப்பு வேண்டினான். ஐயை கோயில்கதவு திறந்து கொண்டது. இங்குக் குறிப்பிடப்படும் மன்னனுடைய பெயரும் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என்று கருதத்தக்கது. ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் காலத்தில் ஒரு குறிப்பிட்ட நாளில் மதுரைநகர் (அரண்மனை) அழியும் என்ற நிமித்திக வாக்கு மக்களிடையே நிலவி வந்தது.4 அரியணையில் அமர்ந்த படியே இறந்துபோனமையால் இந்தப் பாண்டியன் அரசு கட்டிலில் துஞ்சிய
4. ‘ஆடித் திங்கள் பேரிருள் பக்கத்து அழற்குட் டத்து அட்டமி ஞான்று வெள்ளி வாரத்து ஒள்ளெரி யுண்ண உரைசால் மதுரையோடு அரைசுகே டுறும்எனும் உரையும் உண்டே நிரைதொடி யோயே’ (சிலப். 23 : 133 - 137) |