பக்கம் எண் :

330மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 2

பாண்டிய நாடு

தெள்ளாறெறிந்த நந்திவர்மன் காலத்திலே பாண்டிய நாட்டை வரகுணமகாராசனும் அவனுக்குப் பிறகு அவன் மகனான ஸ்ரீ மாறனும் அரசாண்டார்கள். வரகுணனை வரகுண பாண்டியன் என்றும் வரகுண மகாராசன் என்றும் கூறுவர். இவனே முதலாம் வரகுணபாண்டியன் ஆவான். மாணிக்கவாசக சுவாமிகள் தமது திருக்கோவையாரில் கூறுகிற வைகுண பாண்டியன் இவனே. வரகுண பாண்டியனுக்கு மாறஞ்சடையன் என்னும் பெயரும் உண்டு.

இவன் அரசாண்ட காலத்தைத் திட்டமாகக் கூற முடியவில்லை. ஆனால், கி. பி. 825 முதல் 840 வரையில் அரசாண்டான் என்று கருதலாம். சின்னமனூர் பெரிய செப்பேட்டுச் சாசனம் இவனைக் கூறுகிறது. ஆனால், அவன் செய்த போர்களைப்பற்றி ஒன்றும் கூறவில்லை.

இவனுக்குப் பிறகு அரசாண்ட இவன் மகன் ஸ்ரீ மாறனுக்கு, ஸ்ரீ வல்லபன், ஏகவீரன், பரசக்கர கோலாகலன் என்னும் பெயர்கள் உண்டு. இவன் பல போர்களை வென்றான் என்று சின்னமனூர் செப்பேட்டுச் சாசனம் கூறுகிறது.

பாண்டிய அரசர் பரம்பரை4

1. கடுங்கோன் (பாண்டியாதிராசன்)

(கி. பி. 300-க்குப் பிறகு பாண்டி
நாட்டை அரசாண்ட களபரரை
வென்று மீண்டும் பாண்டியர்
ஆட்சியை நிலைநாட்டினான்.)

|

2. மாறவர்மன் அவனை சூளாமணி

|

3. செழியன் சேந்தன்

|

4. அரிகேசரி மாறவர்மன்

(அசமசமன், வில்வேலி
நெல்வேலிப் போரை வென்றவன்.)

|

5. கோச் சடையன் (ரணதீரன்)