| 40 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 4 |
குடபுல மருங்கின் உய்ம்மார் புள்ளோர்த்துப் படையமைத் தெழுந்த பெருஞ்செ யாடவர் நிரைபரப் பொறைய நரைப்புறக் கழுதைக் குறைகுளம்பு தைத்த கல்பிறழ் இயவு’ (அகம், 207: 1-6. சேந்தம்பூதனார்) (வெண்கல் அமிழ்தம் - உப்பு. உய்ம்மார் - கொண்டு போக. புள் ஓர்த்து - நிமிர்த்தம் பார்த்து) வணிகச் சாத்தரை வென்று கொள்ளைக்காரர் வழி பறித்ததைக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் கூறுகிறார். `சாத்தெறிந்து அதர்கூட்டுண்ணும் அணங்குடைப் பகழிக் கொடுவில் ஆடவர்.’ (அகம், 167: 7-9) பாண்டி நாட்டவராகிய மருதன் இளநாகனாரும் இதைக் கூறுகிறார். ‘மழைபெயல் மறந்த கழைதிரங் கியவில் செல்சாத் தெறியும் பண்பில் வாழ்க்கை வல்வில் இளையர்’ (அகம், 245: 5-7) (கழை - மூங்கில். சாத்து - வணிகர் கூட்டம். இளையர் - வீரர்) சங்ககாலத்து வாணிபம் தரை வழியாகவும் கடல் வழியாகவும் நடந்தது. தரைவழியாக வாணிகம் செய்த பெருவணிகருக்கு மாசாத்து வன் என்பது பெயர். அக்காலத்தில் சாலைகள் அதிகமாக இல்லை. சாலைகளிலும் எல்லைப் புறங்களிலும் கொள்ளைக்காரர் இருந்தார்கள். கடல் வழியாக நடந்த வாணிகம் தரை வாணிகத்தைவிடச் சற்று அதிக மாகவும் நன்றாகவும் நடந்தது. கடல் வாணிகத்தை நடத்தின பெரிய வாணிகருக்கு மாநாய்கன் (மாநாவிகன், மா+ நாவிகன்) என்பது பெயர். கடற் பிரயாணத்திலும் காற்று, புயல்களினால் கப்பல்களுக்குச் சேதம் உண்டாயின. கடற் கொள்ளைக்காரர் அதிகம் இல்லை. கடல் வாணிகம் இரண்டு விதமாக நடந்தது. கரைவழி ஓரமாகவே கப்பல்களை ஓட்டி நடத்தின வாணிகம் ஒன்று. கரைவழி ஓரமாகச் செல்லாமல் நடுக்கடலில் கப்பல்களைச் செலுத்திக் கடல் கடந்த நாடுகளுக்குப் போய்ச் செய்த வாணிகம் இன் னொன்று. |