பண்டைத் தமிழகம் வணிகம் - நகரங்கள் மற்றும் பண்பாடு | 81 |
‘கலந்தரு திருவிற் புலம்பெயர் மாக்கள் கலந்தினி துறையும் இலங்குநீர் வரைப்பு’ (5:11-12) என்று சிலப்பதிகாரமுங் கூறுகின்றது. (கலம் - மரக்கலம், புலம் பெயர் மாக்கள் - அயல்நாடுகளிலிருந்து வந்த கப்பலோட்டிகள்) ‘கலந்தரு திருவிற் புலம் பெயர் மாக்கள் வேலை வாலுகத்து விரிதிரைப் பரப்பு’ (சிலம்பு, 6:130-131) (கலம் - மரக்கலம், நாவாய். புலம் பெயர் மாக்கள் - வெளி நாட்டிலிருந்து வந்த கப்பலோட்டிகள். வாலுகம் - மணல்). இவர்களை மணிமேகலை, “பரந்தொருங் கீண்டிய பாடை மாக்கள்” என்று கூறுகின்றது (1:16) அவர்கள் தங்கியிருந்த வீடுகளில் இரவு முழுவதும் விளக்கு எரிந்தது. “மொழி பெயர்தே எத்தோர் ஒழியா விளக்கம்” (சிலம்பு, 6:143) (ஒழியா விளக்கு - விடிவிளக்கு) வெளிநாட்டுக் கப்பலோட்டி களோடு யவனர்களும் (கிரேக்க ரோமர்) தங்கியிருந்தார்கள். ‘கயவாய் மருங்கில் காண்போர்த் தடுக்கும் பயனற வறியா யவனர் இருக்கையும்’ (சிலம்பு, 5:9-10) இப்படிப்பட்ட சிறந்த பட்டினத்தில் தமிழ்நாட்டுக் கப்பல் வாணிகர் பலர் இருந்தார்கள். பல கப்பல்களையுடைய பெரிய கடல் வாணிகருக்கு மாநாவிகர் என்று பெயர் கூறப்பட்டது. (நாவிகர் - கப்பலையுடையவர். நாவாய் - கப்பல்). மாநாவிகர் என்னும் சொல் திரிந்து மாநாய்கர் என்று வழங்கப்பட்டது. கண்ணகியின் தந்தை ஒருமாநாவிகன் (மாநாய்கன்). கோவல னுடைய தந்தை ஒரு பெரிய மாசாத்துவன் (சாத்து - வாணிகச் சாத்து, வாணிகக் குழு, தரை வாணிகக் குழுவுக்குச் சாத்து என்பது பெயர். சாத்து வாணிகன் ஆகையால் மாசாத்துவன் எனப்பட்டான்). அந்தக் காலத்திலே காவிரிப்பூம்பட்டினத் துறைமுகத்தில் வந்து இறங்கின பொருள்களைக் கடியலூர் உருத்திரங்கண்ண னார் கூறுகிறார். இந்தப் பொருள்கள் வெளிநாடுகளிலிருந்து கடல் வழியாகக் கப்பல்களில் வந்தவை. ‘நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும் காலின் வந்த கருங்கறி மூடையும் வடமலைப் பிறந்த மணியும் பொன்னும் குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும் தென்கடல் முத்தும் குணகடல் துகிரும் |