பக்கம் எண் :

தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள் - செப்பேடுகள் - கல்வெட்டுகள் 107

நியமம் என்னும் ஊரில், பெரும்பிடுகு முத்தரையனான சுவரன் மாறன் என்பவன் மாகாளி கோவிலை அமைத்ததையும், அவன் வென்ற போர்களையும், அவனைப் பாடிய புலவர்களின் பெயர் களையும் இந்தத் தூண்களில் உள்ள செய்யுள்களும் வசனங்களும் கூறுகின்றன. இந்தச் சாசனத்தின் எழுத்துக்கள் வெகு அழகாக எழுதப்பட்டுள்ளன.

சாசனச் செய்யுள்

“. . . . டுத்த பெரும்பிடுகு முத்தரையனாயின குவாவன்
மாற னவன்மக னிளங்கோ வதியரைய னாயின மாறன் பர
மேஸ்வர னவன்மகன் பெரும்பிடுகு முத்தரைய னாயின
சுவரன்மாற னவனெடுப்பித்த படாரி கோயிலவனெறிந்த
வூர்களுமவன் பேர்களு மவனைப் பாடினார் பேர்களுமித்
தூண்மேலெழுதின இவை.”

வெங்கட் பொரும . . சேர் வேல்கொடியான் வாண்மாறன்
செங்கட் கரும்பகடு சென்றுழக்க - வங்குலந்தார்
தேரழுந்தி மாவழுந்தச் செங்குருதி மணபரந்த
வூரழுந்தி யூரென்னு மூர்.    1

. . . . . . . . . . .ப்ப ஓடிக்
கழுகு கொழுங்குடற் கவ்வ - விழிகட்பேய்
புண்ணளைந்து கையூம்பப் போர்மணலூர் வென்றதே
மண்ணளைந்த சீர்மாறன் வாள்.    2

பாச்சில்வேள் நம்பன் பாடின.

நிற்கின்ற தண்பணை தோறுந் தஞ்சைத் திறம் பாடிநின்றார்
விற்கின்ற வீரர்க ளூர்கின்ற விப்பிணக் குன்றுகண்
ணெற்குன்ற யானை . . . . . . .ன்ம . . .
. . . . . . . . . . . 3

பால்கொண்ட செவ்வாய் விளையா மொழிப் பருவத்துமுன்னம்
வேல்கொண்ட . . . . . . . . . . . . .
. . . . . . . . . . . . . . . .
. . . . . . . . . . . . 4