பக்கம் எண் :

110மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 14

. . . . . . . . . . . . . . . . . . . .
. . . போலரைசு பிறவா பிறநெடு மேருநெற்றிப்
பொன்போல் பசுங்கதி ராயிரம் வீசும்பொற் றேர்ப்பருதிக்
கென்போ தரவிடுமோ இணைச்சோதி இருவிசும்பேய்.    18

ஆசார்யர் அநிருத்தர் பாடியது.

. . . . . . . . . . . . . . . ற்ற
தீதுகண்டான் றஞ்சைச்செம்புல நாட்டுவெண்கோடல்விண்ட
போதுகண்டாயர் மலையப் புதுமணன் மீதுசெந்தீத்
தாதுகண்டா லன்ன கோவங்களூர்கின்ற தாழ்புறவேய்.    19

தன்முதலாயமும் பூவையுந்தன் கைக்கிளியு முன்பிட்
டென்முதலன்பு மென்னாகச் செய்தா னியக்கத்தை விண்டார்
வன்முதல் ச . க்கருங்கைப் பகடுய்த்த மாறன் றெவ்வற்
கன்முத . . ங்கடத் தேகினான் பின் . . . . ரி . . கயே.    20

அமருண்ணிலை பாடின.

குறிப்பு :- செய்யுள் 1. மாறன் - பெரும்பிடுகு முத்தரையனான சுவரன் மாறன். சுவரன் மாறன் அழுந்தியூரில் போர்வென்றதை இச்செய்யுள் கூறுகிறது. செய்யுள் 2. கையூம்ப - கையைச் சப்ப. சுவரன் மாறன் மணலூரில் போர்வென்றதை இச்செய்யுள் கூறுகிறது. செய்யுள் 5. புறப்படுமாறு - புறங்கொடுக்கும்படி; போரில் பின்னடையும்படி. செய்யுள் 7. வல்லக்கோன் - வல்லத்து அரசனாகிய சுவரன் மாறன். செய்யுள் 11. கள்வர கள்வன் - இது சுவரன் மாறனுடைய சிறப்புப்பெயர்.

-----
சிவலோக நாதன்

இடம் : தஞ்சாவூர் மாவட்டம், சீகாழி தாலுகா, திருவெண்காடு. இவ்வூர் சிவன்கோயில் முதல் பிராகாரத்தின் வடக்குப்பக்கச் சுவரில் உள்ளது.

பதிப்பு : “செந்தமிழ்” தொகுதி பதினான்கு : பக்கம் 355.

விளக்கம் : வீரராஜேந்திர சோழன் காலத்தில் எழுதப்பட்டது இந்த சாசனம். இக்கோயில் சிவபெருமானுக்கு இந்த அரசன் பெயரால்,