| 110 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 14 |
. . . . . . . . . . . . . . . . . . . . . . . போலரைசு பிறவா பிறநெடு மேருநெற்றிப் பொன்போல் பசுங்கதி ராயிரம் வீசும்பொற் றேர்ப்பருதிக் கென்போ தரவிடுமோ இணைச்சோதி இருவிசும்பேய். 18 ஆசார்யர் அநிருத்தர் பாடியது. . . . . . . . . . . . . . . . ற்ற தீதுகண்டான் றஞ்சைச்செம்புல நாட்டுவெண்கோடல்விண்ட போதுகண்டாயர் மலையப் புதுமணன் மீதுசெந்தீத் தாதுகண்டா லன்ன கோவங்களூர்கின்ற தாழ்புறவேய். 19 தன்முதலாயமும் பூவையுந்தன் கைக்கிளியு முன்பிட் டென்முதலன்பு மென்னாகச் செய்தா னியக்கத்தை விண்டார் வன்முதல் ச . க்கருங்கைப் பகடுய்த்த மாறன் றெவ்வற் கன்முத . . ங்கடத் தேகினான் பின் . . . . ரி . . கயே. 20 அமருண்ணிலை பாடின. குறிப்பு :- செய்யுள் 1. மாறன் - பெரும்பிடுகு முத்தரையனான சுவரன் மாறன். சுவரன் மாறன் அழுந்தியூரில் போர்வென்றதை இச்செய்யுள் கூறுகிறது. செய்யுள் 2. கையூம்ப - கையைச் சப்ப. சுவரன் மாறன் மணலூரில் போர்வென்றதை இச்செய்யுள் கூறுகிறது. செய்யுள் 5. புறப்படுமாறு - புறங்கொடுக்கும்படி; போரில் பின்னடையும்படி. செய்யுள் 7. வல்லக்கோன் - வல்லத்து அரசனாகிய சுவரன் மாறன். செய்யுள் 11. கள்வர கள்வன் - இது சுவரன் மாறனுடைய சிறப்புப்பெயர். ----- சிவலோக நாதன் இடம் : தஞ்சாவூர் மாவட்டம், சீகாழி தாலுகா, திருவெண்காடு. இவ்வூர் சிவன்கோயில் முதல் பிராகாரத்தின் வடக்குப்பக்கச் சுவரில் உள்ளது. பதிப்பு : “செந்தமிழ்” தொகுதி பதினான்கு : பக்கம் 355. விளக்கம் : வீரராஜேந்திர சோழன் காலத்தில் எழுதப்பட்டது இந்த சாசனம். இக்கோயில் சிவபெருமானுக்கு இந்த அரசன் பெயரால், |