பக்கம் எண் :

தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள் - செப்பேடுகள் - கல்வெட்டுகள் 109

சேட்டிணர் பூந்தன் பொழிற் செம்பொன் மாரிக்கடி அரணம்
மூட்டின சீற்றம் முன் சென்றது பின்பு பகட்டினத்தோர்
கே . . . மாறன் கடிநக . . . . . . . . . . . .
. . . . . . . . . . . . . . . . . . . . . . .12

பனையைப் பகடுகூடா யன்று பல்லவன் வெல்லத் தென்னன்
முனையைக் கெடச்சென்ற மாறன் முகில்வளர் பீலிஉந்தச்
சுனையைச் சுனைமணிப்பாறை அப்பாறை சொல்லென்விளைந்த
வினையைப் பாரழு விருக்கி . . . . . . . . . . . . . .     13

எண்கி னிருங்கிளையு மேறற் கரியவேய்
வண்கைச் செருமாறன் வாள்காய்த்தி - விண்படர்
வான்செய்நாடு தாமூர்ந்த மாநாடக் கண்ணனூர்க்
கோனாடர் புக்கொளித்த குன்று.    14

எரிவிசும்பு மிருநிலமாய்த் தென்பவான் மாறன்
செருவேன் மறங்கனன்று சீறக்
கொடிமாடத் தன்கொடும்பைக் கூடாத மன்னர்
நெடுமா மதிலிடிந்த நீறு.     15

கிழார்க் கூற்றத்துப் பவதாயமங்கலத்து அமருண்ணிலை ஆயின குவாவங் காஞ்சன் பாடினபாட் டித்தூண்கள் மேலன எல்லாம்

நாகங் கண்டஞ்ச வென்னெஞ்சங்
     கல்லென்ன வொல்லென் கடனீர்
மாகங்கொண் டெறிவர் சாத்தன்
     மாறனெங்கோன் றுடர்க்கண்
மேகங் கொண்டான் வ . . . . .
     . . . ப்பக . . . . . . . .
. . . . . கொண் . . . . . . .
     . மரு . . . . . . . .     16

. . . . பாண் மகனேய் பண்டெல்லாம்
யாமறிது மேங்கயர்க்கேய் சொல்லுநீய் - மாமறங்கைத்
தென்னாடர் காதலியர் தீய்நாட வாய்சிவந்த
மின்னாடர் வேண்மாறன் மெய்.    17