தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள் - செப்பேடுகள் - கல்வெட்டுகள் | 241 |
4. க்கத்தெல்லா நெல்லும் ஐப்பசியும் பொன்னும் 5. நெய்யும் எப்பேர்ப்பட்டதும் நெல்வாயிலிலிருந்து 6. வாழும் தொசியார்க்கு விற்று விலையாவரணம் செய்துகு 7. டுத்தோம் வெண்குன்றத்து சபையோமிதன் றென்னோ 8. ம்உண்டிகையும் பட்டிகையும் காட்டாமேய் நிலைக்காத் 9. து முன்பு நிற்க வெய்மெய் வெறாபிரங் 10. காணமிட வொட்டிக் குடுத்தோம் இத்தர்ம்ம 11. த்தை இலக்கித்தானடி என்றிலைமேலன. 6 - ஆண்டு திருச்சிராப்பள்ளி மாவட்டம், லால்குடி தாலுகா, திருவெள் ளறைக் கிராமத்து ஜம்புநாதசுவாமி கோயிலுக்கு முன்புள்ள கல்லில் எழுதப்பட்டுள்ள சாசனம். பாரத்வாஜ கோத்திர பிரஃமாக்ஷத்ர குலத்து ஸ்ரீ தந்தி நந்தி வர்மரின் 6 - ஆவது ஆண்டில் எழுதப்பட்ட இது, செல்லிக்கோமான் மல்லவான் என்பவரைக் கூறுகிறது. இச் சாசனம் செய்யுளால் ஆனது. இதனைப் பாடியவர் பெருங்காவிதி சடையன்பள்ளி என்பவர். இந்தச் சாசனத்தின் நடுப்பாதியைப் பிற்காலத்தவர் செதுக்கிவிட்டபடியால், இதன் மத்திய பகுதியின் எழுத்துக்கள் மறைந்துவிட்டன. சாசன வாசகம்8 1. ஸ்வஸ்தி ஸ்ரீ. பாரத்வ ............லக ப்ரந்மாக்ஷத்ர குலோத்பவ 2. ல்லவ மஹாராஜ ..............ரமேஸ்வரநாயகி ஸ்ரீ தந்திந 3. ந்திவர்மற்குய ..............றாவது திருவெள்ளறைப 4. ரிடையார் பிரம.............ல்லவ மாமறைத் தொன்றி 5. வனிவேந்தன்.............ள் மாற்பிடுகிளங்கோவேளா 6. ன் சாத்தன் செ.........தன் மாமன் பரசிராமன் 7. திருமருமான் பெருb.........செல்லிக் கோமான்மல்ல 8. வாந்தோண்மறவ..........தசூடி ராடி சூடி மாமணி 9. வௌhளரையர்தங்...........லை நிரவயனந்தந்தி மங்கை 10. க்கான் உறுதியான் புகழ்வளர்க மண்ணி மேலெய் 11. பிரம தேயத்து உறுதியான் விழுப்பேரரையன்சா 12. த்தன் மற்றவன் புகழ்நிற்க. இது பாடித்தந்தோன். 13. பெருங்காவிதி சடையன் பள்ளி. |