பக்கம் எண் :

258மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 14

9. லு நூற்றுக் கலம் இன்னெல்லின்ப
10. லிசையால் நாள்வாய் உழக்கு நெய்
11. நொந்தா விளக்கெரிப் போமானோம் இத்
12. தளி அர்ச்சிப்போம் ஆத்திரையன் நா
13. ராயணன் ஏறனும் இவன்றம்பிமாரும்
14. இன்னால்வோம் இது பழங்கற்
15. படி. இந்த ஸ்ரீ விமானத்திலே
16. ஏற வெட்டின மையில் முன்
17. னிவாஜகம் வெட்டிக்கிட
18. ந்த தனிக் கல்லால் உபை
19. யோக மில்லாமையால்
20. அது தவிர்ந்தது இது
21. நந்தில் பன்மாயேஸ்வரர் க
22. டைக் கூட்ட பெற்றார்.

19-ஆம் ஆண்டு

திருச்சிராப்பள்ளிக்கு வடமேற்கில், 14 கல் தூரத்தில் உள்ள திருவெள்ளறைக் கிராமத்துப் புண்டரீகாக்ஷ சுவாமி குகைக் கோயிலின் மேற்குப்புறத்துத் தூணில் உள்ளது இந்த சாசனம். வெயில் மழையினால் தாக்குண்டு காலப் போக்கில் இச்சாசன எழுத்துக்கள் பெரிதும் மறைந்து விட்டன. சில எழுத்துக்கள் மட்டும் காணப்படுகின்றன.

சாசன வாசகம்27

1. ஸ்வஸ்தி ஸ்ரீ. நந்திவர்ம்மற்கு யா....
2. 19 பல்லவகுல திலக...
3. நந்தி வர்ம்மற்கு............
4. தித்த குல கேதன.........
5. (வி) சய நல்லூழான.........
6. (ய) ரையனால் நி........28

தென் ஆர்க்காடு மாவட்டம், திண்டிவனம் தாலுகா, பெரு மாண்டூர், ரிஷபநாத ஸ்வாமிக்கோயில் என்னும் ஜைனக் கோயிலின் மேற்குப்புறச் சுவரில் உள்ளது.