பக்கம் எண் :

264மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 14

4. யர் குமார மார்த்தண்டனென்னும்37 விளக்கினுக்கு வைச்ச
     பொன் 60 இப்பொன் அறுபதின் கழஞ்சும் கொண்ட
     திரைழர் சவையார் அட்டக்கடவதான நெய் உரி இனால்
     விளக்கு க-உம்.38`

திருச்சிராப்பள்ளி மாவட்டம், லால்குடி தாலுக்கா, லால்குடி சப்தரிஷீசுவரர் கோவில் வடபுறத்துச் சுவரில் உள்ள சாசனம்.

கி.பி. 10-ஆம் நூற்றாண்டு எழுத்தாகக் காணப்படுகிற இச்சாசனம், பழைய சாசனத்தின் படி என்று தெரிகிறது. லால்குடியின் பழைய பெயர் திருத்துவத்துறை என்பது இச்சாசனத்தினால் தெரிகிறது. இதில், திருத்துவத்துறை சிவபெருமானுக்கு இரவும் பகலும் விளக்கெரிப்பதற்காக “தெள்ளாறெறிந்து வென்ற நந்திப்போத்தரையர்” 60 பொற்காசு தானம் செய்ததைக் கூறுகிறது.

சாசன வாசகம்39

1. ஸ்வஸ்திஸ்ரீ யாண்டு எதிராமாண்டு இடையாற்று நாட்டுத்
     திருத்துவத்துறை மஹாதேவர்க்கு தெள்ளாறெறிந்து
     வென்ற நந்திப்போத்தரை

2. யர் குடுத்த பழங்காசு 60-து இவ்வறுபது காசும் இஞ்ஞாட்டு
     நல்லிமங்கலத்து சபை யோம் இவ்வறுபது காசும்
     திருத்துவத்துறை மஹாதேவர்

3. இடைகொண்டு நாராய நாழியால் நிசதி நாழி நெய் ஒரு
     நொந்தாவிளக்கு சந்திராதித்தவல் இரவும் பகலும்
     எரியக்கொண்டு சென்று அளப் போமானாம்

4. ம் நல்லி மங்கலத்து சபையோம் திருத்துவத்துறை
     மஹாதேவர்க்கு அளவேமாயில் முட்டில்முட்டி ரட்டியும்
     மூலப்பட்ட பன்மகேஸ்வரரே

5. சபையாகவும் தனித்தாகவும் நிலைக்களமுள்ளிட்ட தான்
     வேண்டுகோவினுக் புக்கவுள இரு நூற்றுப்பதினாறு
     காணம் தண்டமிட வெ

6. ட்டினோம் நல்லிங்கலத்து சபையோம். இது பன்
     பன்மகேஸ்வரர் நாற்பத் தொண்ணாயிரவரும் இரக்ஷை.