பக்கம் எண் :

32மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 14

சாசனச் செய்யுள்

பொன் பரப்பினானான மகதைப் பெருமாள் கவி.

தாரு முடியு முரசுந் தமக்குரிய
பாரு முடன்பெறுவர் பார்வேந்தர் - வீரப்
பெருமாள் மகதேசன் பேரெழுதித் தத்தம்
திருமார்பி லாளோலை செய்து.     1

வன்மதுரை விட்டு வடகடலான் மால்வழுதி
தென்மதுரை பட்டின்று தென்கடலான் - நன்னுதலாய்
மல்லார்தோள் மாகதர்கோமான் முனிந்தால் மன்னவருக்
கெல்லாங் கடலோ விடம்.     2

ஆழந் தருகடல் வையத் தரசு
     செலுத்திய செங்கோ லரசெல்லாம்
வேழந் தருகொடை வாண திவாகரன்
    விதிமுறை செய்வது மெய்கண்டீ
ரீழந் திரையிடு மாணிக் கப்படி
    யடுமின் தென்னரீ ரிடீராகிற்
சோழன் திரையிடும் யானைக் குங்களை
     யிடுமென் றிருமிது சொன்னோமே.     3

பாரோங்கு கொற்றக் குடைவாணன் பல்புரவித்
தேரோன் திருவுத் திராடநாள் - பேருவமை
குன்றெடா மாலியானைக் கோவேந்தர் வீற்றிருப்ப
ரின்றெடா னின்றெடா னென்று.      4

தென்னர் முதலா வுலகாண்ட செம்பொன்முடி
மன்னர் பெருவாழ்வும் வாள்வலியு - மின்னு
முருவத் திகிரி யுயர்நெடுந்தோர் வாணன்
புருவக் கடைவளையப் போம்.     5

தீய்ந்து பொழிலாகா சிந்தி நகராகா
தூந்து மணிநீர்த் துறையாகா - வேந்துமுலைப்
பூணாகா மாறி விழவாகா பொன்னெடுந்தேர்
வாணாகா வென்னாதார் மண்.     6