32 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 14 |
சாசனச் செய்யுள் பொன் பரப்பினானான மகதைப் பெருமாள் கவி. தாரு முடியு முரசுந் தமக்குரிய பாரு முடன்பெறுவர் பார்வேந்தர் - வீரப் பெருமாள் மகதேசன் பேரெழுதித் தத்தம் திருமார்பி லாளோலை செய்து. 1 வன்மதுரை விட்டு வடகடலான் மால்வழுதி தென்மதுரை பட்டின்று தென்கடலான் - நன்னுதலாய் மல்லார்தோள் மாகதர்கோமான் முனிந்தால் மன்னவருக் கெல்லாங் கடலோ விடம். 2 ஆழந் தருகடல் வையத் தரசு செலுத்திய செங்கோ லரசெல்லாம் வேழந் தருகொடை வாண திவாகரன் விதிமுறை செய்வது மெய்கண்டீ ரீழந் திரையிடு மாணிக் கப்படி யடுமின் தென்னரீ ரிடீராகிற் சோழன் திரையிடும் யானைக் குங்களை யிடுமென் றிருமிது சொன்னோமே. 3 பாரோங்கு கொற்றக் குடைவாணன் பல்புரவித் தேரோன் திருவுத் திராடநாள் - பேருவமை குன்றெடா மாலியானைக் கோவேந்தர் வீற்றிருப்ப ரின்றெடா னின்றெடா னென்று. 4 தென்னர் முதலா வுலகாண்ட செம்பொன்முடி மன்னர் பெருவாழ்வும் வாள்வலியு - மின்னு முருவத் திகிரி யுயர்நெடுந்தோர் வாணன் புருவக் கடைவளையப் போம். 5 தீய்ந்து பொழிலாகா சிந்தி நகராகா தூந்து மணிநீர்த் துறையாகா - வேந்துமுலைப் பூணாகா மாறி விழவாகா பொன்னெடுந்தேர் வாணாகா வென்னாதார் மண். 6 |