| 220 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 15 |
ஆழிசூழ் வையத் தறிவ னடியேத்திக் கூழை தனையக் குடைதுங் குரைபுனல் ஊழியு மன்னுவா மென்றேலோ ரெம்பாவாய்.’ இஃது ஐந்தடியான் வந்ததாயினும், ஒருபுடை யொப்புமை நோக்கிக் கலிவிருத்தத்தின்பாற் படுத்தி வழக்கப்படும். இதனைத் தரவு கொச்சகம் எனினும் இழுக்காது. இஃது அவிநயனார் காட்டியது.” (யா. காரிகை. 43ஆம் உரை) “முன்னிலை நெடிலு மாவு மாவும் னம்மிகப் புணரு மியங்குதிணை யான.” (யா., காரிகை, - 44ஆம் காரிகையுரை மேற்கோள்) யாப்பருங்கல உரையாசிரியர், தமது உரையிலே மேற்கோள் காட்டுகிற அவிநயச் சூத்திரங்கள் வருமாறு: “அஇஉஎ ஒவிவை குறிய மற்றையேழ் நெட்டெ ழுத்தா நேரப் படுமே. 1 குற்றெழுத் துத்தொண் ணூற்றைந் தாகும் நூற்றொடு முப்பத்து மூன்று நெடிலாம். 2 இருநூற் றிருபத் தெட்டுவிரிந் தன வுயிரே வன்மை மென்மை யிடைமை. 3 வல்லெழுத் தாறோ டெழுவகை யிடத்தும் உகரம் அரையாம் யகரமோ டியையின் இகரமுங் குறுகு மென்மனார் புலவர். 4 அக்கேன மாய்தந் தனிநிலை புள்ளி ஒற்றிப் பால வைந்து மிதற்கே. 5 2அளபெடை தனியிரண் டல்வரி ஐஒள வுளதா மொன்றரை தனியுமை யாகும். 6 ஆய்தமும் யவ்வு அவ்வொடு வரினே ஐயெ னெழுத்தொடு மெய்பெறத் தோன்றும். 7 உவ்வொடு வலவரி னௌவியல் பாகும். 8 |