பக்கம் எண் :

மறைந்துபோன தமிழ் நூல்கள்221

நெடிய குறிய வுயிர்மெய் யுயிரும்
வலிய மெலிய விடைமை யளபெடை
மூவுயிர்க் குறுக்கமோ டாமசைக் கெழுத்தே.     9

அளபெழி னல்லதை யாய்தமு மொற்று
மலகியல் பெய்தா வென்மனார் புலவர்.     10

உயிரள பெடையுங் குறுகிய உயிரின்
இகர வுகரமுந் தளைதபி னொற்றம்.     11

சீர்தப வரினு மொற்றியற் றாகும்.”     12

(யாப்பருங்கலம், எழுத்தோத்து உரை மேற்கோள்)

“நேரசை யொன்றே நிரையசை யிரண்டல
காகு மென்ப வறிந்திசி னோரே”     18

எனவும்.

“நேரோ ரலகு நிரையிரண் டலகு
நேர்புமூன் றலகு நிரைபுதான் கலகென்
றோதினார் புலவ ருணரு மாறே.”     14

எனவும் சொன்னார் அவிநயனார்.

“கடையு மிடையு மிணையும்ஐ யிரட்டியும்”     15

என்றார் அவிநயனார்.

(யாப்பருங்கலம், அசையோத்து உரை மேற்கோள்)

“ஈரசைச் சீர்நான் கியற்சீர் மூவசை
இயற்சீ ரெட்டனு ளல்லன விரவினு
நேரிறின் வெள்ளை நிறையிறின் வஞ்சி.     16

ஈரசைச்சீர் பின்முன் னாவைத் துறழ்ந்து
மாறியக்கா னாலசைச் சீர்பதி னாறாம்.     17

நேர்நிரை வரினே சீர்நிலை யெய்தலும்
பாவொடு பிறவும் ஆகும் ஒரோவழி.     18

முதலிடை நுனிநாப் பல்லிதழ் மூக்கிவை
வன்மை முதலாம் மும்மையும் பிறக்கும்.3     19