பக்கம் எண் :

232மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 15

‘நாலசைச்சீர் வெண்பாவி னண்ணா வயற்பாவி
னாசைச்சீர் நேரீற்று நாலிரண்டா - நாலசைச்சீர்
ஈறுநிறை சேரி னிருநான்கும் வஞ்சிக்கே
கூறினார் தொல்லோர் குறித்து’

என்னும் புறனடையானும் பிறவாற்றானும் விளக்கங் கூறினாரா கலானும் என்க.”

(யாப்பருங்கல லிருத்தி, சீரோத்து, 15 உரை.)

யாப்பருங்கல விருத்தியுரைகாரர், அவிநயப் புறனடையாகிய நாலடி நாற்பதிலிருந்து கீழ்க்காணும் வெண்பாக்களை மேற்கோள் காட்டுகிறார்:

“‘குறினெடி லாய்த மளபெடையை காரக்
குறில்குற் றிகர வுகர - மறுவில்
உயிர்மெய் விராய்மெய்யோ டாறாறெழுத்தாஞ்
செயிர்வன்மை மென்மை சமன்.’     1

என்பது நாலடி நாற்பது என்னும் நூலின் எழுத்துப் புறனடை.

“குறிலுயிர் வல்லெழுத்துக் குற்றகர வாதி
குறுகிய ஐஒளமவ் வாய்த - நெறிமையா
லாய்ந்த வசைதொடைதாம் வண்ணங்கட் கெண்முறையா
லேய்ந்தன நானான் கெழுத்து.’     2

இது நாலடி நாற்பது என்னும் நூலின் அசைப் புறனடை.”

(யாப்பருங்கலம், எழுத்தோத்து உரை மேற்கோள்)’

“‘ஆசிரியப் பாவி னயற்பா வடிமயங்கும்
ஆசிரியம் வெண்பாக் கலிக்கண்ணாம் - ஆசிரியம்
வெண்பாக் கலிவிரவும் வஞ்சிக்கண் வெண்பாவி
னொண்பா வடிவிரவா வுற்று.’4     3

‘சீர்வண்ணம் வெள்ளைக் கலிவிரவும் வஞ்சிவு
ளூருங் கலிப்பா சிறுச்சிறிதே - பாவினுள்
வெண்பா வொழித்துத் தளைவிரவுஞ் செய்யுளாம்
வெண்பா கலியுட் புகும்.’

என்றார் நாலாடி நாற்பதுடையாரெனக் கொள்க.”     4

(யாப்பருங்கலம், அடியோத்து உரை மேற்கோள்)