| 240 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 15 |
வெள்ளை முதலா வாசிரிய மிறுதி கொள்ளத் தொடுப்பது மருட்பா வாகும். 34 இஉ இரண்டின் குறுக்கற் தளைதப நிற்புழி யொற்றாம் நிலைமைய வாகும். 35 உயிரள பேழு முரைத்த முறையான் வருமெனி னவ்வியல் வைக்கப் படுமே. 36 ஆய்தமு மொற்று மளபெழ நின்றுழி வேறல கெய்தும் விதியின வாகும்.” 37 வீரசோழிய உரையில், பெருந்தேவனார் கீழ்க்காணும் காக்கைபாடினிய சூத்திரத்தை மேற்கோள் காட்டுகிறார்: “உரைத்த பாவினுக் கொத்த வடிகள் வகுத்துரை பெற்றி யன்றிப் பிறவு நடக்கு மாண நடத்தை யுள்ளே.” 1 பேராசிரியர், தொல்காப்பிய உரையில் (பொருள் - செய்யுளியல்) கீழ்க்காணும் காக்கைபாடினிய சூத்திரங்களை மேற்கோள் காட்டுகிறார்: “வெண்சீ ரொன்றின் வெண்டளை கொளாஅல். 1 வெண்சீ ரொன்றிணும் வெண்டளை யாகு மின்சீர் விரவிய காலை யான.” 2 யாப்பருங்கல விருத்தியுரைகாரர், கீழ்க்காணும் காக்கை பாடினிய சூத்திரங்களைத் தமது உரையில் மேற்கோள் காட்டுகிறார்: “குறினெடி லளபெடை யுயிருறுப் புயிர்மெய் வலிய மெலிய விடைமையொ டாய்தம் இஉ ஐயென மூன்றன் குறுக்கமொ டப்பதின் மூன்று மசைக்குறுப் பாகும். 1 ஆய்தமு மொற்று மளபெழு நிற்புழி வேறலகெய்தும் விதியின வாகும். 2 இஉ இரண்டன்ன குறுக்கந் தளைதப நிற்புழி யொற்றா நிலையின வாகும். 3 |