| 256 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 15 |
நான்கு மூன்று மடிதொறுத் தனிச்சொற் றோன்ற வருவன வெளிவிருத்தம் மே. 19 இறுசீ ரடிமே லொருசீர் குறையடி பெறுவன நேரிசை யாசிரி யம்மே. 20 இடையிடை சீர்தபி னிணைக்குற ளாகும். 21 கொண்ட வடிமுத லாயொத் திறுவது மண்டில யாப்பென வகுத்தனர் புலவர். 22 அடிமூன் றொத்திறி னொத்தா ழிசையே. 23 அறுசீ ரெழுசீ ரடிமிக வரூஉ முறைமைய நாலடி விருத்த மாகும். 24 தரவே தாழிசை தனிச்சொற் சுரிதகம் வருவன வெல்லாந் தாழிசைக் கலியே. 25 சேர்த்திய தரவொடு தாழிசைப் பின்னர் நீர்த்திரை போல நெறிமையிற் சுருங்கி மூவகை யெண்ணு முறைமையின் வழாஅ வளவின வெல்லா மம்போ தரங்கம். 26 அந்த வடிமிக் கல்லா வடியே தந்தமு ளொப்பன கலித்தா ழிசையே. 27 நாற்சீர் நாலடி கலிவிருத்த தம்மே. 28 எஞ்சா விருசீர் நாலடி மூன்றெனில் வஞ்சித் தாழிசை தனிவரிற் றுறையே. 29 முச்சீர் நாலடி யொத்தவை வரினே வஞ்சி விருத்த மென்றனர் கொளலே. 30 தனிச்சொல் லென்ப தடிமுதற் பொருளொடு தனித்தனி நடக்கும் வஞ்சியு ளீறே.” 31 17. செய்யுளியல் செய்யுளியல் என்னும் பெயருள்ள நூல் ஒன்று இருந்த தென்பது யாப்பருங்கல விருத்தியுரையினாலும், யாப்பருங் கலக்காரிகைக்குக் குணசாகரர் எழுதிய உரையினாலும் தெரிகிறது. இவ்வுரையாசிரியர்கள், |