| மறைந்துபோன தமிழ் நூல்கள் | 255 |
இடையுங் கடையும் இணையும் ஐயெழுத்தே. 4 ஈரசை யாகிய மூவசைச் சீர்தான் நேரிறின் வெள்ளை நிரையிறின் வஞ்சி. 5 நடுவுரி நேயலா வஞ்சி யுரிச்சீ ருரிமை யுடைய வாசிரியத் துள்ளே. 6 இயற்சீ ரொன்றா நிலையது வெண்டளை உரிச்சீ ரதனி லொன்றுத லியல்பே. 7 ஈரசை யியற்சீ ரொன்றிய நிலைமை யாசிரி யத்தளை யாகு மென்ப. 8 வெண்சீ ரிறுதி நிரைவரிற் கலித்தனை வஞ்சி வகைமை வரைவின் றாகும். 9 வஞ்கி யல்லா மூவகைப் பாவும் எஞ்சுத லிலவே நாற்சீ ரடிவகை 10 முதலெழுத் தொன்றி முடிவது மோனை யேனைய தொன்றி னெதுகைத் தொடையே யுறுப்பி னொன்னிற் விகற்பமு மப்பா னெறிப்பட வந்தன நேரப் படுமே.7 11 சொல்லிசை யளபெழ நிற்பதை யளபெடை. 12 ஒன்றிய தொடைபொடும் விகற்பந் தன்னொடு மொன்றாது கிடப்பது செந்தொடை யாமே. 13 பல்வகைத் தொடையொரு பாலினிற் றொடுப்பிற் சொல்லிய முதற்றொடை சொல்லினர் கொளலே. 14 பாவே தாழிசை துறையே விருத்தமென நால்வகைப் பாவு நானான் காகும். 15 ஒன்றும் பலவும் விகற்பாய்த் தனிச்சொ லின்றி வருவன வின்னிசை வெண்பா. 16 தொடைபல தொடுப்பன பஃறொடை வெண்பா. 17 அடிமூன் றாகி வெண்பாப் போல விறுவன மூன்றே வெள்ளொத் தாழிசை. 18 |