304 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 15 |
சதுரம் சதுர மென்பது சாற்றுங் காலை மருவிய மூன்று நிமிர்ந்தகம் வளையப் பெருவிர லகமுறப் பொற்பச் சேர்த்திச் சிறுவிரல் பின்பே நிமிர்ந்த கெவ்வியி னிறுமுறைத் தென்பவியல் புணர்ந் தோரே. 33 மான்றலை மான்றலை யென்பது வகுக்குங் காலை மூன்றிடை விரலு நிமிர்ந்தக மிறைஞ்சிப் பெருவிரல் சிறுவிர லென்றிவை நிமிர்ந்து வருவ தென்ப வழக்கறிந் தோரே. 34 சங்கம் சங்கெனப் படுவது சாற்றுங் காலைச் சிறுவிரன் முதலாச் செறிவிர னான்கும் பெறுமுறை வளையப் பெருவிர னிமிர்ந்தாங் கிறுமுறைத் தென்ப வியல்புணர்ந் தோரே. 35 வண்டு வண்டென் பதுவே வகுக்குங் காலை யநாமிகை பெருவிர னனிமிக வளைந்து தாநுனி யொன்றித் தகைசால் சிறுவிரல் வாலிநி னிமிர மற்றைய வளைந்த பாலின தென்ப பயன்றெரிந் தோரே. 36 இலதை இலதை யென்ப தியம்புங் காலைப் பேடியுஞ் சுட்டும் பிணைந்துட னிமிரிந்து கூடிய பெருவிரல் கீழ் வரை இறுகக் கடையிரு விரலும் பின்னர் நிமிர்ந்த நடையின தென்ப நன்னெறிப் புலவர். 37 |