314 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 15 |
ஓங்கும் வெகுளி மதமான மாங்கார நீங்கா வுலோப முட னிவ்வைந்தும்-பாங்காய வண்ண முலைமடலாய் வானகத்தின் கூறென்றா ரெண்ணிமிக நூலுணர்ந்தோ ரெண். 6 ஒப்பார் பிராண னபான முதான னுடன் றப்பா வியானன் சமானனே-யிப்பாலு நாகன் றனஞ்செயன் கூர்மன் கிருகரன் றீதிலாத் தேவதத்த னே. 7 இடைபிங் கலை சுழுமுனை காந்தாரி யத்தி புடைநின்ற சிங்குவை சிங்கினி - பூடாவோ டங்குரு கன்னி யலம்புடை யென்றுரைத்தார் தங்குதச நாடிக டாம். 8 பூத வகைகளோ ரைந்தாய்ப் பொறியைந் தாய் வாதனையோ ரைந்தாய் மாருதமு-மேதகுசீர்ப் பத்தாகு நாடிகளும் பத்தாகும் பாரிடத்தே முத்திர்கு வித்தா முடம்பு. 9 இசைக்குப் பிறப்பிடம். துய்ய வுடம்பளவு தொண்ணுற்றா றங்குலியா மெய்யெழுத்து நின்றியங்க மெல்லத்தான்-வையத் திருபாலு நாற்பதோ டேழ்பாதி நீக்கிக் கருவாகு மாதாரங் காண். 10 ஆதாரம் பற்றி யசைவ முதலெ ழுத்து மூதார்ந்த மெய்யெழுத்து முன்கொண்டு-போதாரு முந்தி யிடைவளியா யோங்குமிடை பிங்கலையால் வந்துமே லோசையாம் வைப்பு : 11 ஐவகைப் பூதமு மாய சரீரத்து மெய்பெறநின் றியங்கி மெய்யெழுத்தாற்-றுய்ய வொருநாடி நின்றியங்கி யுந்திமே லோங்கி வருமா லெழுத்து டம்பின் வந்து. 12 |