பக்கம் எண் :

மறைந்துபோன தமிழ் நூல்கள்313

வளைவா யருகொன்று முத்திரையாய் நீக்கித்
துளையோகழி னின்ற விரல்கள் - விளையாட்
டிடமூன்று நான்குவல மென்றார்கா ணேகா,
வடமாரு மென்முலையாய்! வைத்து.     5

சரிக மபதநியென் றேழெழுத்தாற் றானங்
வரிபரந்த கண்ணினாய்! வைத்துத்-தெரிவரிய
வேழிசையுந் தோன்று மிவற்றுள்ளே பண்பிற்கும்
சூழ் முதலாஞ் சுத்தத் துளை.     6

சாரீர வீணை

பூதமுதற் சாதனத்தாம் புற்கலத்தின் மத்திமத்து
நாதமுதலா மெழுத்து நாலாகி - வீதி
வருவரத்தாற் றானத்தால் வந்து வெளிப்பட்
டிருவாத்தாற் றோற்ற மிசைக்கு.     1

மண்ணுட னீர்நெருப்புக் கால்வான மென்றிவைதா
மெண்ணிய பூதங்க ளென்றறிந்து - நண்ணிய
மன்னர்க்கு மண்கொடுத்து மாற்றார்க்கு விண்கொடுத்த
தென்னவர் கோமாளே தெளி.     2

செப்பிய பூதங்கள் சேர்ந்தோர் குறியன்றே
யப்பரிசு மண்ணைந்து நீர்நாலா - மொப்பரிய
தீயாகின் மூன்றிரண்ட காற்றம் பரமொன்று
வேயாருந் தோளி விளம்பு.     3

மெய்வாய்கண் மூக்குச் செவியெனப் பேர்பெற்ற
வைவாயு மாயவற்றின் மீதடுத்துத்-துய்ய
சுவையொளி யூறோசை நாற்றமென் றைந்தா
லவைமுதற் புற்கல மாம்.     4

(புற்கலம்-உடம்பு)

பசிகோம்பு மைதுனங் காட்சிநீர் கேட்கை
தெசிகின்ற தீக்குணமோ ரைந்து-மொசிகின்ற
போக்கு, வரவுநோய் கும்பித்தன் மெய்ப்பரிசம்
வாக்குடைய காற்றின் வகை.     5