பக்கம் எண் :

312மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 15

யாழ்வகை

பேரியாழ் பின்னு மகரஞ் சகோட முடன்
சீர்பொலியுஞ் செங்கோடு செப்பினார் - தார்பொலிந்து
மன்னுந் திருமார்ப வண்கூடற் கோமானே
பின்னு முளவே பிற.     8

ஒன்று மிருபது மொன்பதும் பத்துடனே
நின்ற பதினான்கும் பின்னேழுங்-குன்றாத
நால்வகை யாழிற்கு நன்னரம்பு சொன்முறையே
மேல்வகை நூலோர் விதி.     9

கோட்டின தமைதியுங் கொளுவிய வாணியு
மாட்டிய பத்தரின் வகையு மாடக முந்
தந்திரி யமைதியுஞ் சாற்றிய பிறவு
மூந்திய நூலின் முடிந்த வகையே     10

குழல்-வங்கியம்

ஓங்கிய மூங்கி லுயர்சந்து வெண்கலமே
பாங்குறு செங் காலி கருங்காலி-பூங்குழலாய்
கண்ண னுவந்த கழைக்கிவைக ளாமென்றார்
பண்ணமைந்த நூல்வல்லோர் பார்த்து.

உயர்ந்த சமதலத் தோங்கிக் கானான்கின்
மயங்காமை நின்ற மரத்தின் மயங்காமே
முற்றிய மாமரந் தன்னை முதளடிந்த
குற்றமிலோ ராண்டிற் கொளல்

சொல்லு மிதற்களவு நாலைந்தாஞ் சுற்றளவு
நல்விரல்க ணாலரையா நன்னுதலாய்-மெல்லத்
துணையளவு நெல்லரிசி தூபமிடமாய் தும்பிட மாய
வளைவலமேல் வங்கிய மென்.

இருவிரல்க ணீக்கி முதல்வாயேழ் நீக்கி
மருவு துளையெட்டு மன்னும்-பெருவிரல்க
ணாலங்சு கொள்க பரப்பென்ப, நன்னுதலாய்!
கோலஞ்செய் வங்கியத்தின் கூறு.