மறைந்துபோன தமிழ் நூல்கள் | 311 |
முரிவரி எழுத்த வியலு மிசையுந் தம்மின் முரித்துப் பாடுதன் முரியெனப் படுமே. யாழ் மாடகம் ‘மாடக மென்பது வகுக்குங் காலைக் கருவிளங் காழ்ப்பினை நல்விரல் கொண்டு திருவயில் பாலிகை வடிவாக் கடைந்து சதுர மூன்றகத் துளையிடற் குரித்தே.3 1 இணைநரம்பு. இணையெனப் படுவ கீழு மேலு மணையத் தோன்று மளவின வென்ப.3 2 கிளைநரம்பு கிளையெனப் படுவ கிளக்குங் காலை குரலே யிளியே துத்தம் விளரி கைக்கிளை யெனவைந் தாகு மென்ப.3 3 பகை நரம்பு நின்ற நரம்பிற் காறு மூன்றுஞ் சென்றுபெற நிற்பது கூட மாகும்.3 4 கண்ணிய கீழ்மூன் றாகி மேலு நண்ணல் வேண்டு மீரிரண்டு நரம்பே.4 5 குரலே துத்த மிளியிவை நான்கும் விளரி கைக்கிளை மும்மூன் றாகித் தளராத் தார முழையிவை யீரிரண் டெனவெழு மென்ப வறிந்திசி னோரே.4 6 தாரத்துட் டோன்று முழையுழை யுட்டோன்று மோருங் குரல் குரலி னுட்டோன்றிச் - சேருமிளி யுட்டோன்றுந் துத்தத்துட் டோன்றும் விளரியுட் கைக்கிளை தோன்றும் பிறப்பு.5 7 |