பக்கம் எண் :

310மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 15

(வினயம் - தேவபாணி)

வரிப்பாட்டு

சிலப்பதிகாரம், கானல்வரி உரையில் அரும்பதவுரையாசிரியர் காட்டிய நூற்பாக்கள்.

கூடைச் செய்யுள்.

கூடை யென்பது கூறுங் காலை
நான்கடி யாகி யிடையடி மடக்கி
நான்கடி யஃகி நடத்தற்கு முரித்தே.     1

வாரச் செய்யுள்.

வார மென்பது வகுக்குங் காலை
நடையினு மொலியினு மெழுத்தினு நோக்கித்
தொடையமைந் தொழுகுந் தொன்மைத் தென்ப.     2

முகமுடைவரி

நிலமுத லாகிய வுலகியல் வரிக்கு
முகமாய் நிற்றலின் முகமெனப் படுமே.     3
சிந்து நெடிலுஞ் சேரினும் வரையார்.     4

சார்த்துவரி

பாட்டுடைத் தலைவன் பதியொடும் பேரொடுஞ்
சார்த்திப் பாடிற் சார்த்தெனப் படுமே.     5

முரிச்சார்த்து

முரிந்தவற ... ... ...
குற்றெழுத் தியலாற் குறுகிய நடையாற்
யெற்ற வடித்தொகை மூன்று மிரண்டுங்
குற்ற மில்லெனக் கூறினர் புலவர்.     6

நிலைவரி

முகமு முரியுந் தன்னோடு முடியு
நிலையை யுடையது நிலையெனப் படுமே.     7