| மறைந்துபோன தமிழ் நூல்கள் | 41 |
உள்ளார் கொல்லோ தோழி முள்ளுடை யிலவ மேறிய கலவ மஞ்ஞை யெரிபுகு மகளி ரேய்க்கு மரில்படு கள்ளியங் காடிறந் தோரே. 10 உள்ளார் கொல்லோ தோழி வெள்ளைப் புழுங்க னெல்லின் பொரிவீழ்த் தென்ன நுண்குழிப் புற்றின் மண்கா லீயல் கோல்பிடி குருட ரேய்க்கு மாலுறு கள்ளியங் காடிறந் தோரே. 11 அடும்பம னெடுங்கொடி யுள்புதைந் தொளிப்ப வெண்மணல் விரிக்குந் தண்ணந் துறைவன் கொடிய னாயிறு மாக வவனே தோழியென் னுயிர்கா வலனே. 12 இச்செய்யுள்களை நச்சினார்க்கினியர் (தொல். பொருள். 111ஆம் சூ.), மேற்கோள் காட்டியுள்ளார். நாற்கவிராச நம்பி இயற்றிய அகப்பொருள் விளக்கம் ஒழிபியலில் (42ஆம் சூத்திரம்) கீழ்க்காணும் சிற்றெட்டகச் செய்யுள்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன: “உரைத்திசிற் றோழியது புரைத்தோ வன்றே துருக்கங் கமழு மென்றோள் துறப்ப வென்றி யிரீஇயரென் னுயிரே4 13 என்னுஞ் சிற்றெட்டகத்துக் குறிஞ்சிப்பாட்டினுள் ஊடல் என்னும் உரிப்பொருள் கண்டுகொள்க.” தொல். பொருள். அகத்திணையியல் 24ஆம் சூத்திர உரையில் இளம்பூரண அடிகள் மேற்கோள் காட்டியுள்ளார். “நாளு நாளு மாள்வினை யழுங்க வில்லிலிருந்து மகிழ்வோற் கில்லையாற் புகழென வொண்பொருட் ககல்வர்நங் காதலர் கண்பனி துடையினித் தோழி நீயே5 14. |