பக்கம் எண் :

50மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 15

மங்கையர்தங் கண்ணால் மயங்கினார் வெள்ளெலும்புந்
துங்க வெருக்குந் தொடுத்தணிந் - தங்கமெலாம்
வெந்தேறு சாம்பல் மிகவணிந்து வீதிதொறும்
வந்தேறி யூர்வர் மடல்.      16

செம்ம லொருவன் செறிபூந் தழையேந்தி
மம்மர் பெருகி வனப்பழித்து - நம்முடைய
நன்பூம் புனமகலான் நாமதற்குச் செய்வதுமற்
றென்பூங் குழலா யியம்பு.      17

வங்கமு மீனெறியு மாக்களு மீன்சுறவும்
பொங்குந் திரையும் பொருகடலு - மிங்கிவை
தேர்த்திரளுங் காலாளுந் திண்களிறும் வெம்பரியும்
போர்க்களமும் போலும் பொலிந்து.      18

வட்ட முலையில் மலர்க்கண்ணில் வார்குழலிற்
பட்ட படியைப் பகர்வதோ - மட்டுவிரி
கந்தநறுங் கூந்தற் கனங்குழைக்குக் காவலநீ
தந்தநறுஞ் சாரற் றழை.      19

தாது விரிபொழிலுந் தண்டுறையும் புண்டரிகப்
போது விரிகமழ்நீர்ப் பொய்கைகளு - மீது
நெருங்குங் குருகினமு நெஞ்சுருக நம்மை
யுருக்குந் தனியிடமொன் றுண்டு.      20

முல்லை மலர்நின் முடிமலராக் கொண்டியா
னொல்லை வருவ னொருபொருப்பன் - றில்லைநகர்
ஆரணங்கே யிங்கேநி லங்கே வரின்மன்னுஞ்
சூரணங்கே செய்யுந் தொடர்ந்து.      21

எவ்விடத் தென்செய்த தென்றறியே னிப்போதைக்
கிவ்விடத்தி லென்னுழைவந் தெய்தாதே - வெவ்வினையேன்
இன்னலே கூர வினிதளித்தார் தேரின்பின்
நென்னலே போனவென் னெஞ்சு.      22

அன்னை நெருந லணியிழையாள் கொங்கையையும்
என்னையும் நோக்கி யிருவரையும் - புன்னை
வளையாடு கானல்வாய் மானனையீர் இன்று
விளையாட லென்றாள் விரைந்து.      23