பக்கம் எண் :

மறைந்துபோன தமிழ் நூல்கள்51

கள்ளவிழுங் காவி முடித்துக் கமழ்பசுஞ்சாந்
தள்ளி முடிமே லழகெழுதிப் - புள்ளுறங்கும்
வேங்கை மரநிழற்கீழ் நிற்பேம் வியன்சிலம்பா
நாங்கள் விளையாட நன்கு.      24

மொய்யிருளி னீரே முளரி யகந்திறந்து
செய்ய வடியிற் சிலம்பொதுக்கிப் - பையவொரு
மின்வந்த தென்ன வெறுந்தனியே வந்தவா
வென்வந்து சொல்லீ ரெமக்கு.      25

அன்னநடைப் பேதை யருமை யறியாதே
என்னை வருத்துகின்ற தென்கொலோ - துன்னிருட்கண்
வஞ்சமே யன்ன மலர்விழியா லீடழியும்
நெஞ்சமே கட்டுரையாய் நீ.      26

ஊர்துயிலி னாய்துயிலா வொண்டொடி யூர்காக்கும்
பேர்துயிலு மாறொருகாற் பெற்றாலும் - நேர்துயிலா
ளன்னை நெடுநிலா வல்லும் பகலாகு
மென்னை வருவதுநீ யிங்கு.      27

கல்லதருங் கான்யாறு நீந்திக் கரடிகளும்
கொல்கரியுஞ் செய்யுங் கொலைபிழைத்து - வல்லிருளிற்
சாரன் மலைநாட தன்னந் தனிவந்து
சேரல் சிறியா டிறத்து.      28

வார லிருபொழுதும் வந்தால் மலைநாட
வேரல் புனைதிருந்தோள் மெல்லியலாள் - சூரல்
வழியிடையூ றஞ்சு மிரவெலா மன்ன
பழியிடையூ றஞ்சும் பகல்.      29

உன்னையு நீத்தகன்றா ருண்டோ வுடல்கருகிப்
புன்னை கமழும் பொருகடலே - யென்னைப்போல்
நெஞ்சா குலம் பெருகி நீயு மிரவெல்லாந்
துஞ்சாத தென்கொலோ சொல்லு.      30

பந்தி யிளமிளகு பாராதே தின்றனைய
மந்தி தளரு மலைநாட - முந்தருவி
சோர வரிநெடுங்கண் சுற்றும் பனிவாடை
யீர மெலிவா ளிவள்.      31