பக்கம் எண் :

52மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 15

அம்பல் பெருகி யலரான தல்லிதொறுந்
தும்பி முரலுஞ் சுரிகூந்தற் - கொம்பனைய
பண்ணறா மென்சொல்லி பால்வந்து பல்காலும்
அண்ணறான் செய்யு மருள்.      32

கொங்கைக்குந் தூய குலவளைசேர் கோகனகச்
செங்கைக்கு மென்னவிலை செப்புவோம் - மங்கை
தெரியா மருங்குலுக்குத் தேசம்விலை யென்னத்
தரியார் மலைவாணர் தாம்.      33

தீய பெருவனமுஞ் செந்தறையு நந்தரையுந்
தூய பெருவனமுஞ் சோலையுமா - மாய
கலம்பா முலைமகட்குக் காமருபூங் கண்ணிச்
சிலம்பாநின் பின்னர்ச் செலின்.      34

கோல மறியின் குருதியாற் கொய்ம்மலரால்
வேல னயரும் வெளியாட்டுச் - சால
மடவார் மயின்முருக னன்றியே யண்ணல்
தடமார்பு முண்ணுமோ தான்.      35

தூய நினதறிவுங் கல்வியுந் தொன்முனிவ
ராய வவர்வரவு மன்றாயின் - மேயசீ
ரேலார்பூ வட்ட முறையிடவும் போதாது
வேலா முலைக்கு விலை.      36

வஞ்சி யிடைமடவாய் வல்வினையே னுண்கண்ணு
நெஞ்சு மகலாது நிற்றலாற் - செஞ்சுரும்பு
பண்ணளிக்குந் தண்டார்ப் பருவரைசூழ் நன்னாடன்
றண்ணளிக்கு முண்டோ தவறு.      37

அன்ன நடைமடவா யாற்றி யமைவார்
சொன்ன வரிய சுரங்கடந்தோ - முன்னமரர்
தங்களூர் போலத் தனியே வடகொங்கிற்
றிங்களூர் தோன்றுஞ் சிறந்து.      38

எங்களூ ரிவ்வூ ரிதுவொழிந்தால் வில்வேடர்
தங்களூர் வேறில்லை தாமுமூர் - திங்களூர்
நானு மொருதுணையா நாளைப்போ கும்மிந்த
மானும் நடைமெலிந்தாள் வந்து.      39